பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

27


சோறு எங்கே விக்கும்? தொண்டையிலே விக்கும்.

சோறு என்ன செய்யும்; சொன்ன வண்ணம் செய்யும்.

சோறு கண்ட இடம் சுகம்.

சோறு கண்ட இடம் சொர்க்கம்; கஞ்சி கண்ட இடம் கைலாசம்.

சோறு கிடைக்காத நாளில் ஜோடி நாய் எதற்கு? 11720


சோறு சிந்தினால் பொறுக்கலாம்; சுணை சிந்தினால் பொறுக்கலாமா?

(பா - ம்.) சுனை நீர் சிந்தினால்.

சோறு சிந்தினால் பொறுக்கலாம்; நீர் சிந்தினால் பொறுக்கலாமா?

சோறு சிந்தினால் பொறுக்கலாம்; மானம் சிந்தினால் பொறுக்கலாமா?

சோறும் சீலையும் கேளாமல் இருந்தால் சொந்தப் பிள்ளையைப் போலப் பார்த்துக் கொள்கிறேன்.

(பெற்ற பிள்ளையைப் போல வளர்த்துக் கொள்கிறேன்.)

சோறும் இலையும் கேளாமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்குச் சமானம். 11725


சோறும் துணியும் கேளாமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்குச் சமானம்.

சோறும் துணியும் தவிர மற்றதுக்கெல்லாம் குறைவு இல்லை.

சோறு போட்டு மலமும் வார வேண்டியது ஆயிற்று.

சோறு வேண்டாதவன் கருப்புக்குப் பயப்படான்.

(கருப்பு - பஞ்சம்.)