பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தமிழ்ப் பழமொழிகள்



தன் ஊருக்கு ஆனை; அயலூருக்குப் பூனை.

(மன் ஊருக்குப் பூனை.)

தன் ஊருக்குக் காளை; அயல் ஊருக்குப் பூனை.

தன் ஊருக்குப் புலி; அசலூருக்கு நரி.

தன் கண் இரண்டும் போனாலும் அயலான் கண் ஒன்றாவது போகவேண்டும்.

தன் கண் தனக்குத் தெரியாது. 12170


தன் கண்ணைக் கொடுத்து வெங்கண்ணை வாங்க வேண்டும்.

தன் கஷ்டத்தை விடப் பெண் கஷ்டம் பொல்லாது.

தன் காசு செல்லாவிட்டால் தட்டானைக் கட்டி அடித்தானாம்.

தின் காயம் தனக்குத் தித்திப்பு.

தன் காரியதுரந்தான், பிறர் காரியம் வழவழ என்று விடுகிறவன். 12175


தன் காரியப் புலி.

தன் காரியம் என்றால் தன் சீலையும் பதைக்கும்.

தன் காரியம் தனக்குத் தித்திப்பு.

தன் காரியம் பாராதவன் சதைக்கு ஒரு புழுப் புழுப்பான்.

(சதையால்.)

தன் காரியம் ஜரூர், சாமி காரியம் வழவழா. 12180


தன் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டும்.

(பார்த்தான் நடந்தால் போதாதோ?)

தன் காலைத் தானே கும்பிட்டுக் கொள்ளலாமா?

தன் கீர்த்தியை விரும்பாதவனைத் தள்ளிவிடு.

தன் குஞ்சு என்று வளர்க்குமாம், குயிற் குஞ்சைக் காகம்.

தன் குணம் போல் தனக்கு வரும் வாழ்வு. 12185


தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்க்கிறதா?

தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது.

(தெரியாது.)

தன் குற்றம் தனக்குத் தெரியாது.

தன் குற்றம் பார்ப்பவர் இங்கு இல்லை.

தன் குற்றம் முதுகில்; பிறர் குற்றம் எதிரில். 12190


தன் குற்றமும் பெண்டாட்டி நாற்றமும் தெரியா.

தன் குற்றமும் முதுகும் தனக்குத் தெரியா.

தன் கை ஆயுதம் பிறன் கையிற் கொடுப்பவன் பதர்.