பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தமிழ்ப் பழமொழிகள்

49


தன் கைத் தவிடு உதவுவது போலத் தாயார் கைத்தனம் உதவாது.

(தன் கைத்தனம்.)

தன் கையே கண்ணைக் குத்தினாற் போல. 12195


தன் கையே தனக்கு உதவி.

(உதவும்.)

தன் கொல்லையில் கீரையை வைத்துக் கொண்டு அசல் வீட்டுக்குப் போவனேன்?

தன் சோற்றில் உள்ள கல்லைப் பொறுக்கமாட்டாதவன் சொக்கனார் கோயில் மதிற் கல்லைப் பிடுங்கப் போனானாம்.

தன் சோற்றைத் தின்று தரையில் இருந்தால் வீண் சொல் கேட்க விதியோ!

தன் சோறு தின்று, தன் புடைவை கட்டி, விண் சொல் கேட்க விதியோ? 12200

(தன் துகில் தரிப்பார்க்கு, விதி ஏன்?)


தன் தப்புப் பிறருக்குச் சந்து.

தன் தலையில் அக்ஷதை போட்டுக் கொள்கிறான்.

தன் தார் தார் பரதார புத்திரன்.

(தாரதார.)

தன் தொழிலைப் பாராதவனுக்குத் தலையளவு பஞ்சம்.

தன் நாயை உசுப்பியே தன்னைக் கடிக்கச் செய்யலாம். 12205


தன் நாற்றத்தைத் தானே. கிளப்பிக் கொள்கிறதா?

தன் நிலத்தில் குறுமுயல் தந்தியிலும் வலிது.

(யானையிலும் :)

தன் நிழல் தன்னைக் காக்கும்.

தன் நிழல் தன்னோடே வரும்.

தன் நெஞ்சு அறியாத பொய் இல்லை; தாய் அறியாத சூல் இல்லை. 12210


தன் நெஞ்சே தன்னைச் சுடும்.

தன் நோய்க்குத் தானே மருந்து.

(பழமொழி நானூறு.)

தன் பணம் செல்லா விட்டால் தட்டானைக் கட்டி அடித்தானாம்.

(தாதனை.)

தன் பல்லைக் குத்திப் பிறர் மூக்கில் வாசனை காட்டுவது போல.

தன் பல்லைக் குத்தித் தன்னையே நாத்திக் கொள்ளலாமா? 12215

(நாற்றி.)