தமிழ்ப் பழமொழிகள்
51
தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்தாற் போல. 12240
- (வைத்து விடிகிற மட்டும் நாய் ஓட்டினாளாம்.)
தன் வீட்டுக்குத் தவிடு இடிக்கவில்லையாம்; ஊரார் வீட்டுக்கு
இரும்பு இடிக்கப் போனாளாம்.
தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை அசல் வீட்டுக்குப் போகச் சொன்னால் போவானா?
தன் வீட்டு நாய் என்று தாவ விடுவதா?
தன் வீட்டுப் படலை இரவல் கொடுத்துவிட்டு விடிய விடிய நாய் காத்தானாம்.
தன் வீட்டு விளக்கு என்று முத்தம் இடலாமா? 12245
- (இருக்கிறதா?)
தன் வீட்டு விளக்குத் தன்னைச் சுடாதா?
தன் வீடு தவிர அசல் வீட்டுக்கு மேட்டு வரி என்றான்.
தன்னது தன்னது என்றால் குசுவும் மணக்கும்.
தன்னந் தனியே போகிறாள்; திமிர் பிடித்து அலைகிறாள்.
தன்னவன் செய்கிறது மன்னனும் செய்யான். 12250
தன்னவன் தனக்கானவனாய் இருந்தால் தலைப் பாதியில் இருந்தால் என்ன? கடைப் பந்தியில் இருந்தால் என்ன?
- (பரிமாறுகிறவனாய் இருந்தால், )
தன்னால் இல்லாத வேளாண்மையும் தான் உழாத நிலமும் தரிசு.
- (தன் ஆள் இல்லாத)
தன்னால் தான் கெட்டான் பத்மாசுரன்.
தன்னாலே தாழ் திறந்தால் தச்சன் என்ன செய்கிறது.
தன்னாலே தான் கெட்டால் அண்ணாவியார் என்ன செய்வார். 12255
- (அண்ணாவியார் - உபாத்தியாயர்.)
தன்னில் எளியது தனக்கு இரை.
தன்னை அழுத்தினது சமுத்திரம்.
தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்.
தன்னை அறிந்தவன் தானே தலைவன்.
தன்னை அறிந்து பின்னைப் பேசு. 12260
தன்னை அறியாச் சன்னதம் உண்டா?
- (அறியாத சன்னதம் இல்லை.)