52
தமிழ்ப் பழமொழிகள்
தன்னை அறியாதவன் தலைவனை அறியான்.
தன்னை அறியாப் பேயாட்டம் உண்டா?
தன்னை இகழ்வாரைப் பொறுத்தலே தலையாம்.
தன்னை ஒளித்து ஒரு வஞ்சனை இல்லை. 12265
தன்னைக் கட்டக் கயிறு யானை தானே கொடுத்தாற் போல்.
தன்னைக் காக்கிற் கோபத்தைக் காக்க வேண்டும்.
தன்னைக் கொல்ல வந்தது ஆயினும் பசுவைக் கொல்லல் ஆகாது.
- (திருவாலவாயுடையார் திருவிளையாடல் 36-21.)
தன்னைக் கொல்லவந்த பசுவைத் தான் கொன்றால்பாவம் இல்லை.
தன்னைச் சிரிப்பது அறியாதாம் பல்லாவரத்துக் குரங்கு 12270
- (தன்னைப் பார்த்துச் சிரிக்குமாம்.)
தன்னைச் சிரிப்பாரைத் தான் அறியான்.
தன்னைத் தானே பழிக்குமாம். தென்ன மரத்திலே குரங்கு இருந்து,
தன்னைத் தானே மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுக் கொழுக்கட்டை.
தன்னைப் பணிவாரைத் தான் பணியக் காலம் வந்தது.
தன்னைப் பாடுவான் சம்பந்தன்; என்னைப் பாடுவான் அப்பன்; பொன்னைப் பாடுவான் சுந்தரன். 12275
- (சிவபெருமான் கூற்று.)
தன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லையாம் தென்னமரத்துக் குரங்கு; பார்த்துப் பார்த்துச் சிரிக்கிறதாம் பலா மரத்துக் குரங்கை.
தன்னைப் புகழ்தலும் தரும் புலவோர்க்கே.
- (நன்னூல்.)
தன்னைப் புகழ்வானும் சாண் ஏறி நிற்பானும் பொன்னைப் புதைத்துப் போவானும் பேய்.
தன்னைப் புகழாத கம்மாளன் இல்லை.
தன்னைப் புகழாதவரும் இல்லை; தனித்த இடத்தில் குசுவாத வரும் இல்லை. 12280
தன்னைப் பெற்ற ஆத்தாள் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள்; தம்பி கும்பகோணத்தில் கோதானம் பண்ணுகிறான்.
தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப்பிச்சை வாங்குகிறாள்; தங்கத்தாலே சரப்பளி தொங்க ஆடுகிறதாம்.
தன்னைப் பெற்றவள் கொடும்பாவி; தன் பெண்ணைப் பெற்றவள் மகராசி.