பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தமிழ்ப் பழமொழிகள்

53


தன்னைப் போல வேணுமாம் தவிட்டுக்குக் கட்டை.

தனக்காகப் புத்தி இல்லை; பிறத்தியார் சொல் கேட்கிறதும் இல்லை. 12285


தனக்கு அழகு மொட்டை; பிறர்க்கழகு கொண்டை.

(கூந்தல்-தனக்குக் கொண்டை, பிறர்க்கு மொட்டை.)

தனக்கு அழகு மொட்டை, பிறர்க்கு அழகு கொண்டை.

தனக்கு ஆகாத பானை உடைந்தால் என்ன? இருந்தால் என்ன?

தனக்கு இல்லாத அழகு தண்ணீர்ப் பானையைப் பார்த்தால் தீருமா?

(தண்ணீரை.)

தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு. 12290

(பழமொழி நானூறு. )


தனக்கு உகந்த ஊணும் பிறர்க்கு உகந்த கோலமும்.

தனக்கு உண்டு; எதிரிக்கு இல்லை.

தனக்கு உதவாத பாலைக் கொட்டிக் கவிழ்த்தாளாம்.

தனக்கு உதவாத பிள்ளை ஊருக்கு உதவும்.

தனக்கு எளிய சம்பந்தம்; விரலுக்குந் தகுந்த வீக்கம். 12295


தனக்கு எளியது சம்பந்தம்; தனக்குப் பெரியது விம்மந்தம்.

(ஒம்மந்தம், யாழ்ப்பாண வழக்கு.)

தனக்கு என்றால் பிள்ளையும் களை வெட்டும்.

தனக்கு என்றால் புழுக்கை கலம் கழுவி உண்ணான்.

தனக்கு என்று அடுப்பு மூட்டித் தான் வாழும் காலத்தில் வயிறும் சிறுக்கும்; மதியும் பெருக்கும்.

தனக்கு என்று இருந்தால் சமயத்துக்கு உதவும். 12300


தனக்கு என்று ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் இருந்து அழுவாள்.

தனக்கு என்று கொல்ல நாய் வெடுக்கென்று பாயும்.

(சொல்ல.)

தனக்கு என்ன என்று இருக்கல் ஆகாது; நாய்க்குச் சோறு இல்லை ஆயின்.

தனக்கு ஒன்று, பிறத்தியாருக்கு ஒன்று.

தனக்குக் கண்டுதானே தானம் வழங்க வேண்டும்? 12305


தனக்குச் சந்தேகம்; அடைப்பைக்காரனுக்கு இரட்டைப் படியாம்.

தனக்குத் தகாத காரியத்தில் பிரவேசிப்பவன் குரங்கு பட்ட பாடுபடுவான்.

தனக்குத் தகாத காரியம் செய்தால் ஆளுக்குப் பிராண சேதத்துக்கு வரும்.