பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தா


தாக்ளா மோக்ளா இல்லை. 12335


தாகம் இருக்கிறது; இரக்கம் இல்லை.

(இறக்கம்.)

தாங்கித் தாங்கிப் பார்த்தால் தலைமேல் ஏறுகிறான்.

தாங்கினால் தலைமேல் ஏறுகிறான்.

தாங்குகிற ஆள் உண்டு; தளர்ச்சி உண்டு.

தாசரி தப்புத் தண்டவாளத்துக்குச் சரி. 12340


தாசிக்குப் பாளையம் கொடுத்தால் தகப்பனும் போகலாம்; பிள்ளையும் போகலாம்.

தாசி பகட்டும் தாவணி மிரட்டும் போகப் போகத் தெரியும்,

தாசி பிள்ளைக்குத் தகப்பன் யார்?

தாசில் தடுமாறிப் போகிறது!

தாசில்தார் கோழி முட்டை சம்சாரி அம்மிக்கல்லையும் உடைக்கும். 12345


தாசில்தாருக்குத் தாசில் வேலை போனாலும் சமையல்காரனுக்குச் சமையல் வேலை போகவில்லை.

தாசில்தாருக்கு வேலை போச்சு; சமையல்காரனுக்கு என்ன கவலை?

தாசி வீட்டுக்குப் போனபின் தாய் இல்லாப் பிள்ளை என்றால் விடுவாளா?

தாட்டோட்டக்காரனுக்குத் தயிறும் சோறும்; விசுவாசக்காரனுக்கு வெந்நீரும், பருக்கையும்.

தாட்டோட்டக்காரனைக் கூடுவதிலும் தனியே இருப்பது நலம். 12350

(தாட்டோட்டக்காரனுடன்.)


தாடிக்குப் பூக் கட்டலாமா?

(சூடலாமா?)
(இரத்தின சபாபதி மாலை.)

தாடிக்கும் பூண் கட்டலாமா?