பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76


தீ


தீப்பட்ட புண்ணில் ஈர்க்கினால் குத்தியது போல.

தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டைக்குப் பஞ்சமா? 12850

(கரிக்குப்பைக்கு.)


திப்பட்ட வீட்டிலே பிடுங்கினது ஆதாயம்.

(அகப்பட்டது மிச்சம்.)

தீப்பட்ட வீட்டுக்குப் பீக்குட்டைத் தண்ணீர்.

தீப்பட்ட வீட்டுக்கு மேல் காற்றுப் போல.

தீப்பட்டால் பூனை காட்டிலே.

தீப்பந்தம் கண்ட ஆனை போல. 12855


தீப்புண் ஆறும்; வாய்ப்புண் ஆறாது.

தீபத்தில் ஏற்றிய தீவட்டி.

தீபாவளிக் கோழியைப் போல.

தீ மிஞ்ச வைத்தாலும் பகை மிஞ்ச வைக்கல் ஆகாது.

தீமை மேலிடத் தெய்வம் கைவிட்டது. 12860


தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.

தீமையை வெல்ல நன்மையைச் செய்.

தீயாரைச் சேர்ந்து ஒழுகல் தீது; தீயார் பணி செய்வதுவும் தீது.

(தீயார் வரை.)

தீயாரோடு இணங்காதே; சேப்பங் கிழங்குக்குப் புளி குத்தாதே.

தீயில் இட்ட நெய் திரும்பி வருமா? 12865


தீயினால் சுட்ட புண் ஆறும்; வாயினால் சுட்ட புண் ஆறாது.

(நாவினால்.)

தீயும் தீயும் சேர்ந்து பெருந்தீ ஆனாற் போல்.

தீயும் பயிருக்குப் பெய்யும் மழைபோல.

தீயைச் செல் அரிக்குமா?

தீயை மிதித்தவன்போல் திகைத்து நிற்கிறான். 12870


தீயோரை விடுதலை ஆக்குகிறவன் நல்லோருக்கு நஷ்டம் செய்வான்.