பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

77


தீர்க்கத் திறன் அற்றவன் தேசிகன் ஆவான்.

தீர்க்கதரிசி, பீங்கான் திருடி.

தீர்த்தக் கரைப் பாவி.

திரக் கற்றவன் தேசிகன் ஆவான். 12875


தீராக் கோபம் போராய் முடியும்.

(பாடாய் முடியும்.)

தீராச் சந்தேகம் போருக்கு யத்தனம்,

தீராச் செய்கை சீர் ஆகாது,

தீரா நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி.

(துணை.)

தீரா நோய்க்குத் தெய்வமே கதி. 12880


தீராப் பொறிக்குத் தெய்வமே துணை.

தீரா வழக்குக்குத் தெய்வமே சாட்சி.

தீரா வழக்கு நேர் ஆகாது.

தீவட்டிக்காரனுக்குக் கண் தெரியாது.

தீவட்டிக் கொள்ளை கால் வட்டிக்கு ஈடு ஆகாது. 12885

(கால்வட்டிக் கொள்ளைக்கு.)


தீவட்டிக் கொள்ளை போன பின் திருமங்கல்யச் சரடு தேடினாளாம்.

தீவட்டி தூக்க வேண்டுமானாலும் திருமண் போடத் தெரியவேணும்.

(ஸ்ரீரங்கத்தில்.)

தீவட்டியின் கீழ் விளக்கு.

திவாள் திடுக்கிடுவாள்; திண்ணைக்கு மண் இடுவாள்; வருகிற கிழமைக்கு வாசலுக்கு மண் இடுவாள்.

தீவிளிக்குத் தீவிளி தலை முழுகுகிறாள். 12890


தீவினை செய்தவர்க்கே சேரும்.

தீவினை செய்யின் பெய்வினை செய்யும்.

(முடியும்.)

தீவினை முற்றிப் பாழ்வினை ஆச்சுது.

(பானை ஆச்சுது.)

தீனிக்கு அடுத்த லத்தி; சாதிக்கு அடுத்த புத்தி.

தீனிக்குத் திம்ம ராஜா, வேலைக்கு வெற்று ராஜா. 12895

(தீனுக்கு.)


தீக்ஷிதன் வீட்டுக் கல்யாணம் திமிலோகப்படுகிறது.

(சிதம்பரத்தில்.)