தமிழ்ப் பழமொழிகள்
77
தீர்க்கத் திறன் அற்றவன் தேசிகன் ஆவான்.
தீர்க்கதரிசி, பீங்கான் திருடி.
தீர்த்தக் கரைப் பாவி.
திரக் கற்றவன் தேசிகன் ஆவான். 12875
தீராக் கோபம் போராய் முடியும்.
- (பாடாய் முடியும்.)
தீராச் சந்தேகம் போருக்கு யத்தனம்,
தீராச் செய்கை சீர் ஆகாது,
தீரா நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி.
- (துணை.)
தீரா நோய்க்குத் தெய்வமே கதி. 12880
தீராப் பொறிக்குத் தெய்வமே துணை.
தீரா வழக்குக்குத் தெய்வமே சாட்சி.
தீரா வழக்கு நேர் ஆகாது.
தீவட்டிக்காரனுக்குக் கண் தெரியாது.
தீவட்டிக் கொள்ளை கால் வட்டிக்கு ஈடு ஆகாது. 12885
- (கால்வட்டிக் கொள்ளைக்கு.)
தீவட்டிக் கொள்ளை போன பின் திருமங்கல்யச் சரடு தேடினாளாம்.
தீவட்டி தூக்க வேண்டுமானாலும் திருமண் போடத் தெரியவேணும்.
- (ஸ்ரீரங்கத்தில்.)
தீவட்டியின் கீழ் விளக்கு.
திவாள் திடுக்கிடுவாள்; திண்ணைக்கு மண் இடுவாள்; வருகிற கிழமைக்கு வாசலுக்கு மண் இடுவாள்.
தீவிளிக்குத் தீவிளி தலை முழுகுகிறாள். 12890
தீவினை செய்தவர்க்கே சேரும்.
தீவினை செய்யின் பெய்வினை செய்யும்.
- (முடியும்.)
தீவினை முற்றிப் பாழ்வினை ஆச்சுது.
- (பானை ஆச்சுது.)
தீனிக்கு அடுத்த லத்தி; சாதிக்கு அடுத்த புத்தி.
தீனிக்குத் திம்ம ராஜா, வேலைக்கு வெற்று ராஜா. 12895
- (தீனுக்கு.)
தீக்ஷிதன் வீட்டுக் கல்யாணம் திமிலோகப்படுகிறது.
- (சிதம்பரத்தில்.)