பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

79


துடுப்பு இருக்கக் கை வேளானேன்?

(நோவானேன்? வேகுமா?)

துடைகாலி முண்டை துடைத்துப் போட்டாள்.

துடைகாலி வந்ததும் எல்லாம் தொலைந்து போச்சுது.

துடை தட்டின மனிதனும் அடை தட்டின வீடும் பாழ்.

துடைப்புக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டினது போல. 12920


துடையில் புண், மாமனார் வைத்தியம்.

துடையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறதா?

துண்டுப் பாளையக்காரன் இடைநடுவில் அடிக்கிறது போல.

(துடிக்கிறது.)

துண்டும் துணியும் சீக்கிரம் விலை போகும்; பட்டும் பணியும் பையத்தான் விலை போகும்.

துணிக்குப் போதுமானபடி சொக்காய் வெட்டு; வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்யாதே. 12925


துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை; அழுகிறவளுக்குத் துக்கம் இல்லை.

துணிந்த மல்லுக்குத் தோளில் சுட்டால் அதுவும் ஒரு ஈக்கடி.

துணிந்த முண்டையைத் துடையில் சுட்டால் அதுவும் ஒர் ஈக்கடி என்று சொன்னாளாம்.

துணிந்தவருக்குச் சமுத்திரம் முழங்கால் ஆழம்.

துணிந்தவன் ஐயம்பேட்டையான். 12930


துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை; அழுதவனுக்கு அகங்காரம் இல்லை.

துணிந்தவனுக்குத் துணை வேண்டுமா?

துணிந்தவனுக்குப் பயமா?

துணிந்தாருக்குத் துக்கம் உண்டா? பணிந்தாருக்குப் பாடு உண்டா?

துணியைத் தூக்குவதற்கு முன்னே தொடையில் வைப்பது போல. 12935

(இடக்கர்.)


துணிவது பின்; நினைவது முன்.

துணிவும் பணிவும் துக்கம் தீர்க்கும்.

துணை இரண்டானால் தூக்கணத்துக்கு மனைவி இரண்டு.

துணை இருப்பாருக்கு வினை இழைப்பதா?

துணை உடையான் படைக்கு அஞ்சான். 12940