பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

95


தேன் ஒழுகப் பேசுவான்.

தேன் குடித்த குரங்கைத் தேள் கொட்டியது போல.

தேன் கூட்டிலே கல்லை விட்டு எறியலாமா?

தேன் சர்க்கரை சிற்றப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா? 13290


தேன் தொட்டவர் கையை நக்காரோ?

(தேன் எடுத்தவர்.)

தேன் நீரைக் கண்டு வான்நீர் ஒழுகுவது போல்.

தேன் வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரம் நுங்கு ஆகுமோ?

தேனாகப் பேசித் தெருக் கடக்க வழிவிடுவான்.

தேனில் விழுந்த ஈப்போலத் தவிக்கிறான். 13295

(தத்தளிக்கிறான்.)


தேனுக்கு ஈயைத் தேடி விடுவார் உண்டா?

தேனுக்கு ஈயைப் தேடி விடுவார் யார்?

தேனுக்கு ஈயைப் பிடித்து விடவேண்டுமா?

தேனும் தினை மாவும் தேவருக்கு அமிர்தம்.

தேனும் பாலும்போல் இருந்து கழுத்தை அறுத்தான். 13300


தேனும் பாலும் போல் சேரவேண்டும்,

தேனும் பாலும் போல

தேனும் பாலும் செந்தமிழ்க் கல்வி.

தேனை எடுத்தவரைத் தண்டிக்குமாம் தேனீ

தேனைக் குடித்துவிட்டு இளித்த வாயன் தலையில் தடவினாற்போல. 13305


தேனைத் தடவிக் கொண்டு தெருத் தெருவாய்ப் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்.

தேனைத் தொட்டாயோ? நீரைத் தொட்டாயோ?

தேனைத் தொட்டு நீரைத் தொட்டாற்போல் பழகுதல்.

தேனை வழிக்கிறவன் புறங்கையை நக்கமாட்டானா?

தேனை வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரங்காய் தேங்காய் ஆகாது. 13310