118
தமிழ்ப் பழமொழிகள்
வந்த காரியத்தைக் கவனிக்காமல் பந்தற்காலைக் கட்டிக் கொண்டு நின்றானாம். 19555
வந்த காலோடு பந்தற்காலைக் கட்டிக் கொண்டு நிற்கிறாய்,
வந்த கூத்து ஆடித்தானே தீரவேண்டும்?
வந்த சண்டையை விடுவதும் இல்லை; வலியச் சண்டைக்குப் போவதும் இல்லை.
வந்தட்டிக் காக்காய் வரப்பிலே; ஊர்க் காக்காய் கரையிலே.
வந்ததடா சண்டை பிராமணா, இறக்கடா மூட்டையை. 19560
வந்தது எல்லாம் கொள்ளும் மகாராஜன் கப்பல்.
வந்தது கப்பல்; மலர்ந்தது தொப்பை.
வந்தது சண்டை, இறக்கடி கூடையை.
வந்தது பேய், வளர்ந்தது பேய், கொண்டு வந்தது கொள்ளி வாய்ப் பிசாசு.
வந்தது போய் விடும்; இருக்கிறது போகாது. 19565
வந்ததும் அப்படியே, சிவன் தந்ததும் அப்படியே, எனக்கு முன் என் அதிர்ஷ்டம் போய் நிற்கிறது.
வந்ததும் பிசாசு, போனதும் பிசாசு, கொண்டு வந்ததும் கொள்ளிவாய்ப் பிசாசு.
வந்ததே சிறுக்கி பந்து அடித்தாள்; வரவரச் சிறுக்கி கழுதை மேயக்கிறாள்.
வந்ததை வரப்படுத்தடா, வலக்காட்டு ராமா!
வந்ததை வரப்பற்ற வேண்டும், 19570
வந்தபின் காப்பவனைவிட வருமுன் காப்போன் புத்திசாலி.
வந்த பேரை வாழ வைக்கும் வைகுண்ட மாநகர் இதுவே
வந்த மாடு கட்டுவதும் இல்லை; கெட்ட மாடு தேடுவதும் இல்லை.
வந்தவர் எல்லாம் சந்தையிற் குடியா?
வந்தவள் கறுப்பு ஆனால் வமிசமே கறுப்பு. 19575
வந்தளவிலே சிறுக்கி பந்தடித்தாள்; வரவர மாமி கழுதை போல் ஆனாள்.