பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தமிழ்ப் பழமொழிகள்



வந்த காரியத்தைக் கவனிக்காமல் பந்தற்காலைக் கட்டிக் கொண்டு நின்றானாம். 19555


வந்த காலோடு பந்தற்காலைக் கட்டிக் கொண்டு நிற்கிறாய்,

வந்த கூத்து ஆடித்தானே தீரவேண்டும்?

வந்த சண்டையை விடுவதும் இல்லை; வலியச் சண்டைக்குப் போவதும் இல்லை.

வந்தட்டிக் காக்காய் வரப்பிலே; ஊர்க் காக்காய் கரையிலே.

வந்ததடா சண்டை பிராமணா, இறக்கடா மூட்டையை. 19560


வந்தது எல்லாம் கொள்ளும் மகாராஜன் கப்பல்.

வந்தது கப்பல்; மலர்ந்தது தொப்பை.

வந்தது சண்டை, இறக்கடி கூடையை.

(எட்டினது கூடையை.)

வந்தது பேய், வளர்ந்தது பேய், கொண்டு வந்தது கொள்ளி வாய்ப் பிசாசு.

(மருகன், மகன், மாப்பிள்ளை.)

வந்தது போய் விடும்; இருக்கிறது போகாது. 19565


வந்ததும் அப்படியே, சிவன் தந்ததும் அப்படியே, எனக்கு முன் என் அதிர்ஷ்டம் போய் நிற்கிறது.

வந்ததும் பிசாசு, போனதும் பிசாசு, கொண்டு வந்ததும் கொள்ளிவாய்ப் பிசாசு.

வந்ததே சிறுக்கி பந்து அடித்தாள்; வரவரச் சிறுக்கி கழுதை மேயக்கிறாள்.

(வந்ததே பெண்.)

வந்ததை வரப்படுத்தடா, வலக்காட்டு ராமா!

வந்ததை வரப்பற்ற வேண்டும், 19570

(வரப்பற்று.)


வந்தபின் காப்பவனைவிட வருமுன் காப்போன் புத்திசாலி.

வந்த பேரை வாழ வைக்கும் வைகுண்ட மாநகர் இதுவே

(ஆண்டான் கவிராயர் கூற்று.)

வந்த மாடு கட்டுவதும் இல்லை; கெட்ட மாடு தேடுவதும் இல்லை.

வந்தவர் எல்லாம் சந்தையிற் குடியா?

வந்தவள் கறுப்பு ஆனால் வமிசமே கறுப்பு. 19575


வந்தளவிலே சிறுக்கி பந்தடித்தாள்; வரவர மாமி கழுதை போல் ஆனாள்.