இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
148
தமிழ் மொழி-இலக்கிய வரலாறு
அகநானூறு
1. "மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. ’’ (குறள்-60)
"கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின் நன்ன ராட்டி......" (அகநானூறு. 184)
2. "தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. ’’ (குறள்-1103)
"செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள்சேர்பு எய்திய கனைதுயில் ஏற்றொறுங் திருகி மெய்புகு வன்ன கைகவர் முயக்கின் மிகுதிகண் டன்றோ இலனே." (அகநானூறு-379)
3. "செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுகின்
வல்வரவு வாழ்வார்க் குரை." (குறள்-1151)
"வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ .......................... நின்றாங்குப் பெயருங் கானஞ் சென்றோர் மன்னென இருக்கிற் போர்க்கே." (அகநானூறு.387)
புறநானுறு
1. "சிறப்பினும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்(கு)
ஆக்கம் எவனோ உயிர்க்கு.' (குறள்-31)
"அறத்தான் வருவதே யின்பம்மற் றெல்லாம் புறத்த புகழு மில." (குறள்-39)
"சிறப்புடைமரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படுஉம் தோற்றம் போல..." (புறம்-31)