பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

அகநானூறு

1. "மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்

   நன்கலம் நன்மக்கட் பேறு. ’’ (குறள்-60)
  "கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய 
  புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின் 
  நன்ன ராட்டி......"  (அகநானூறு. 184)

2. "தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

   தாமரைக் கண்ணான் உலகு. ’’ (குறள்-1103)
   "செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள்சேர்பு
    எய்திய கனைதுயில் ஏற்றொறுங் திருகி 
    மெய்புகு வன்ன கைகவர் முயக்கின் 
    மிகுதிகண் டன்றோ இலனே." (அகநானூறு-379)

3. "செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுகின்

     வல்வரவு வாழ்வார்க் குரை." (குறள்-1151)
   "வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ
       ..........................
    நின்றாங்குப் பெயருங் கானஞ் 
    சென்றோர் மன்னென இருக்கிற் போர்க்கே."
                                   (அகநானூறு.387)

புறநானுறு

1. "சிறப்பினும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்(கு)

   ஆக்கம் எவனோ உயிர்க்கு.' (குறள்-31)
  "அறத்தான் வருவதே யின்பம்மற் றெல்லாம் 
   புறத்த புகழு மில." (குறள்-39)
  "சிறப்புடைமரபிற் பொருளும் இன்பமும்
   அறத்து வழிப்படுஉம் தோற்றம் போல..." (புறம்-31)