170
தமிழ் மொழி-இலக்கிய வரலாறு
1. பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்,
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ கிலந்தலைக் கொண்ட பொலம்பூங் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்'
என்று புறப்பாடல் ஒன்றில் (2) பாராட்டப்பட்டுள்ளான். இச்சேரர் பெருந்தகை பாரதகாலத்தவன் என்று பொருள் படும்படி இப்பாடலுக்கு உரை கண்ட பழைய புலவர் எழுதியுள்ளார். தம் செய்யுட்களில் வரலாற்றுச் செய்திகளைப் புகுத்திப்பாடும் இயல்புடைய மாமூலனார் என்ற சங்ககாலப் புலவர்,
"துறக்க மெய்திய தொய்யா கல்லிசை
முதியர்ப் பேணிய வுதியஞ் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை யிரும்பல் கூளிச் சுற்றங் குழீஇயிருந் தாங்கு' என்று உதியன் சேரலாதன் பெருஞ்சோறு கொடுத்த திறத்தை அகநானூற்றுச் செய்யுள் ஒன்றில் (278) பாராட்டியுள்ளார்.
கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தைச் செய்த இளங்கோவடிகள்,
"ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ வூசல் கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ வூசல்' என்று (காதை 29 செ. 24) புறநானூற்றில் கூறப்பெற்ற நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இளங்கோவடிகள் தமக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து செயற்கரும் செயலைச் செய்த தமது முன்னோனை உளமாரப்