பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187


மருவி வழங்கப்படுகிறது. மகளிர்க்கு இடக்கண் துடித்தல் நல்ல குறி 2.18).

விளையாட்டுகள் : பிள்ளைகள் சிறுதேர் உருட்டி விளையாடினர் (66, 403). சிறுமிகள் மணலால் பாவை செய்து நீர்த்துறையில் விளையாடினர் (69) . ஆடவரும் பெண்டிரும் புனலாடுதல் வழக்கம். தலைவன் பரத்தையோடு புனலாடுவான். தலைவி அதனையறிந்து ஊடல் கொள்வாள் (71,80) , நீரில் பாய்ந்து விளையாடல் பண்ணை பாய்தல்' (74) எனப்பட்டது. வண்டல் மண்ணைக்கொண்டு பாவை செய்து விளையாடுதல் சிறுமியர் வழக்கம். அப்பாவை 'வண்டல் பாவை' எனப்பட்டது (124) . சிறுமிகள் விரும்பி விளையாடும் ஒருவகை விளையாட்டுப் பொய்தல்' எனப் பெயர் பெற்றது. அதனை ஆடிமுடித்து இளமகளிர் குவிந்த வெண்மணலில் குரவை ஆடுவர் (181) . குரவை என்பது பெண்கள் எழுவர் அல்லது ஒன்பதின்மர் கைகோத்து ஆடும் விளையாட்டு வகை. மகளிர் பந்தாடுதல் வழக்கம் (295) . பெண்கள் கிளிகளை வளர்த்துப் பேசக்கற்பித்தல் வழக்க மாகும் (375) பெண்கள் பந்தும் பாவையும் ஆடுதல் போலவே கழங்கு வைத்தும் ஆடிவந்தனர் (377). பரத் தையர் வேழ மரத்தின் புழை பொருந்திய தண்டில் அஞ்ச னத்தைப் பெய்து வைப்பர் (செ. 16).

மேற்கோள் : ஐந்குறுநூற்றுச் செய்யுட்கள் சிறிய பாக்களாயிருப்பினும் தமிழ்வளம் செறிந்தவை; இனிமையும் எளிமையும் வாய்ந்தவை. பிற நூல்களுக்குத் தேவையான சொற்களையும் சொற்றொடர்களையும் வழங்கும் நிலையில் அமைந்தவை. சான்றாகக் கீழ் வருவனவற்றைக் காண்க: 1. தாழிருங் கூந்தல் வம்மதி விரைந்தே 411 தாழிருங் கூந்தல் தையால் நின்னை’’ -சிலப். காதை 2, வரி 80 2. கல்லேறு தழீஇ நாகுபெயர் காலை” 445 இளமணாஆி நாகுதழுவி ஏறுவருவன கண்டேன்' -

-அப்பர் தேவாரம்