பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. நற்றிணை

முன்னுரை

இவ்வகப்பொருள் நூல் நானூறு அகவற் பாக்களையுடையது. பாக்கள் ஒன்பதடிச் சிறுமையும் பன்னிரண்டு அடிப் பெருமையும் உடையவை, இந்நூல் மிகச் சிறந்த அகத்திணை இலக்கியம். 187 புலவர் பாடிய பாக்கள் இந் தூரலில் அடங்கியுள்ளன. இந்நூலைத் தொகுப்பித்தோன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவன். தொகுத்தவர் இன்னவர் என்பது தெரியவில்லை. காலஞ் சென்ற பெரும் புலவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரவர்கள் இந்நூற்பாடல்கட்குப் பொழிப்புரை முதலியன எழுதியுள்ளனர். அப்பெரியார் தொண்டு பாராட்டத்தக்கது. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரும் அண்மையில் இந்நூலுக்கு உரையெழுதி வெளியிட்டுள்ளனர்.

நற்றிணையில் செய்யுட்களைப் பாடிய புலவர்கள்-187 பேர்[1]

1. அகம்பன் மாலாதனார்
2. அஞ்சில் அஞ்சியார்
3. அஞ்சில் ஆந்தையார்
4. அம்மள்ளனார்
5. அம்மூவனார்
6. அம்மெய்யனாகனார்
7. அல்லங்கீரனார்
8. அறிவுடைநம்பி

9. ஆலங்குடி வங்கனார்
10. ஆலம்பேரிசாத்தனார்
11. ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்
12. இடைக்காடனார்
13. இளங்கீரனார்
14. இளந்திரையனார்
15. இளந்தேவனார்


  1. 175 சங்கப்புலவர்கள் பாடியுள்ளனர் என்று தஞ்சை சீநிவாசப் பிள்ளையவர்களும் S. வையாபுரிப் பிள்ளையவர்களும் கூறுவர்.- தமிழ் வரலாறு பக். 34; தமிழ் மொழி-இலக்கிய வரலாறு, பக். 24