பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

257


இத்தகைய பாக்களை வேறு தொகை நூல்களில் காணல் இயலாது. இந்நூற்பாக்களின் நடை எளிமை வாய்ந்தது. இப்பாக்கள் வருணனை மிகுந்தவை. ஒவ்வொரு பாவிற்கும் இசை கூறப்பட்டிருப்பதால் இவை இசையோடு பாடுவதற்கு அமைந்தவை என்பது தெரிகிறது. ஆதலால் இவை மக்களுடைய பேச்சு வழக்குச் சொற்களையும் ஆங்காங்கே பெற்றுள்ளன. இங்ஙனம் இப்பாடல்கள் 'பா' வகையிலும் செய்யுள் நடையிலும் வருணனையிலும் எண்ணத்திலும் முறைவைப்பிலும் பிறவற்றிலும் மாறுபட்டுள்ளமை அறியத் தகும்.

   அழிந்தன போக இன்று இந்நூலில் இருப்பவை 22 பாடல்களாகும்; (தொல்காப்பிய உரையிலும் புறத்திரட்டிலும் வேறு மூன்று பாடல்கள் கிடைத்துள). இவற்றுள் திருமாலைப் பற்றியவை ஆறு; முருகனைப் பற்றியவை எட்டு, வையை பற்றியவை எட்டு; மதுரை, வையையாறு, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ் சோலைமலை ஆகியவை பற்றிய செய்திகளே இப்பாடல்களிற் காணப்படுகின்றன. இவற்றை நோக்க. இந்நூற்பாக்கள் பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பெற்றன என்று கருத இடந்தரு கின்றன .
   ஆசிரியர் நல்லந்துவனார், இளம்பெரு வழுதியார், கடுவன் இளஎயினனார், கரும்பிள்ளைப் பூதனார், கீரந்தையார், குன்றம்பூதனார், கேசவனார், நப்பண்ணனார், நல்லச்சுதனார், நல்லழுசியார், நல்லெழுனியார், நல்வழுதியார், மையோடக்கோவனார் என்னும் பதின்மூன்றுபேர் இந்நூற் பாடல்களைப் பாடியுள்ளனர். ஒவ்வொரு பாடலுக்கும் இசை வகுத்த புலவர் வேறாவர்.
  இந்நூற் பாடல்களுக்குப் பரிமேலழகர் இயற்றிய உரை கிடைத்துள்ளது. இவ்வுரை பல இடங்களில் பொழிப்புரை யாயும், சில இடங்களில் பதவுரையாயும், வேறு சில இடங்

த-17.