பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு


களில் கருத்துரையாயும் அமைந்துள்ளது; இலக்கணக் குறிப்புகளை ஆங்காங்குப் பெற்றுள்ளது. விளங்காத பகுதிகள் சில தமிழ் நூல் மேற்கோள்களாலும் வடநூல் கருத்துகளாலும் விளக்கப்பட்டுள்ளன.

டாக்டர் உ. வே சாமிநாதையர் அவர்கள் இந்நூலைச் சிறந்த முறையிற் பதிப்பித்தனர். சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தார் புதிய உரையுடன் கூடிய பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். -

பரிபாடலின் காலம்

பரிபாடல் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது என்று கூறும் அறிஞர் வையாபுரிப் பிள்ளையவர்கள் அதற்குரிய தடைகளைக் கீழ்வருமாறு மொழிகின்றனர்:

தடைகள் : 1. பரிபாடல்களைப் பாடிய புலவருள் ஒருவரேனும் பிற தொகை நூல்களைப்பாடியவராய்த் தெரிந்திலர். சில பரிபாடல்களைப் பாடிய ஆசிரியன் நல்லந்துவனார், அந்துவனார்-மதுரை ஆசிரியன் நல்லந்துவனார் என்னும் புலவர்களின் வேறானவர். இங்ஙனமே பதினைந்தாம் பரி பாடலைப் பாடிய இளம்பெருவழுதியார் புறநானூற்றில் 182 ஆம் செய்யுளைப் பாடிய கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதியின் வேறானவர். ஏனெனில், பின்னவர் தமது புறப்பாட்டில் 'இந்திரர்’ என்று பன்மையில் சுட்டலால் சமணர் எனக் கருதற்பாலர் ஆதலின் என்க.5

2. பிற தொகை நூல்களில் காணப்படும் வடசொற்களையும், புராண இதிகாசக் கதைகளையும் விடப் பரிபாடல்களில் இவ்விருவகையும் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. கவிதை, ஆராதனை (பாடல் 6) மேகலை, வாகுவலயம்(பாடல்7) , புங்கவம், நாதர், குடாரி, அருச்சிப்போர்,

5. History of Tamil Languge and Literature.

P. 29