பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_பதியின்_ரைநடை-மொழி __02 “தமிழா! உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மித மிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லெளகீகக் கொள்கைகள், வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடம் கொடுத்து விட்டாய். இவற்றை நீக்கி விடு. வீட்டிலும், வெளியிலும் தனிமையிலும் கட்டிடத்திலும் எதிலும் எப்போதும் நேர்மை இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. நீ இயன்ற வரை அதைத் தடுக்க வேண்டும். எல்லாப்பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை, தவங்களுக்கெல்லாம் உயிர். உண்மை, சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழா எல்லாச் செய்திகளிலும், உண்மை நிலவும் படி செய். “தமிழா எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை, எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. முந்திய சாஸ்திரம் தான் மெய், பிந்திய சாஸ்திரம் பொய்” என்று தீர்மானம் செய்து கொள்ளாதே! காலத்துக்கும் உண்மைக்கும் எதிரிடையாக ஒர் கணக்கு எற்பட்டிருக்கிறா? “தகப்பன் வெட்டிய கிணறு” என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள் என்று பஞ்ச தந்திரம் நகைக்கிறது. “இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள்” என்று பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. “இவற்றுள் அறமாவது கடமை, அது உனக்கும், உனது சுற்றத்தாருக்கும் பிறர்க்கும் நீ செலுத்த வேண்டிய கடமை “பிறர்”