பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

270

எனவே, 2_GöðT Gö)(3)] இனிமையுடையதாக்குவது உப்பே யாதலின் உப்பு இனிமை எனப்பட்டது.

உணவை உணவாக ஆக்குவது - அதாவது - உண்ணக் கூடியதாகச் செய்வது உப்பே யாதலின் உணவுக்கு உப்பு என்னும் குழுஉக்குறிப் பெயரும் உண்டு. அவர் உப்பைத் தின்றுவிட்டு அவருக்கே கேடு செய்யலாமா ? உங்கள் உப்பைத் தின்றுவிட்டு உங்களுக்கே கேடு சூழ்வேன ? என்னும் உலக வழக்குத் தொடர்களில் உப்பு என்றது உணவைக் குறிக்கின்றதல்லவா ? எனவே மண்டல புருடர் சூடா மணி நிகண்டில் உப்பு என்னும் சொல்லுக்கு உணவு என்ற பொருளையும் சேர்த்து ஐந்து பொருள்கள் எழுதி யிருக்கலாம். இவ்வாறு எழுதாவிடினும், அவர் கூறி யுள்ள இனிமை என்னும் கான்காவது பொருளிலேயே உணவு என்னும் ஐந்தாவது பொருளையும் அடக்கி விட லாம். உணவை உண்ணக்கூடிய அளவில் இனிமை யுடைய பொருளாகச் செய்வது உப்பே யன்ருே !

உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்னும் முது மொழியும் தமிழ் மொழியில் உண்டு. ஈண்டு, உப்பிட் டவர் என்பதற்கு உணவளித்தவர் என்று பொருள் கொள்வதனினும், கூழுக்கோ, கஞ்சிக்கோ, கீரைக்கோ போட உப்பு வாங்கவும் வசதியின்றி நீ தவித்தபோது, சிறிது உப்பு அளித்து உண்ணும்படிச் செய்தவர்கள் என்று பொருள் கொள்வது சாலச் சிறந்தது. எனவே, உப்பே இனிமை என்னும் பொருட்பொருத்தம் இப்போது இனிது விளங்குமே !

ஏன், உப்பு என்னும் சொல்லுக்கு இனிமை என் நறும் பொருள் உண்டா என்று வள்ளுவனரிடம்