பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

88

88


பொருள் காணவேண்டும்:- மனைவியிடம் பெறும் சிற்றின்பத்தைத் துறந்து உலகிற்குப் பணி புரிந்தார் புத்த பகவான்; அவர் போலவே இவனும் மனைவியின் சிற்றின்பத்தை மட்டுப்படுத்திக் கொண்டவன், என்பது பொருள். எட்டாவது தொகுதிப் பாடலில்கூட, 'ஐம்புலன் ஆளும் அம்பல் கோமான்’ என்று சிறப்பிக்கப்பெற்றுளானல்லவா? எனவே, புலன் உணர்ச்சியை அடக்கியாள்பவன் என்னும் பொருளில் கூறப்பட்டுள்ள போதிப் பெருந்தவன் என்னும் உருவகத்தைக் கொண்டு இவனைப் புத்த மதத்தினன் எனல் பொருந்தாது.

இதே மூன்றாம் தொகுதிப் பாடலில் உள்ள அவ்வை பாடிய 'அம்பல் கிழவன்' என்னும் தொடரைக் கொண்டு இவன் அவ்வையாரால் பாடப்பட்டுள்ளான் என்பது புலனாகிறது. அவர் இவன்மேல் பாடிய தனிப்பாடலோ அல்லது தனி நூலோ யாதெனப் புலப்பட்டிலது. அஃதும் இழந்த செல்வங்களின் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியதே போலும்!

அடுத்து நான்காம் தொகுதிப் பாடலில், இவனது நாடோ பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழக் கூடியது; இவன் காவிரி ஆறோ காலம் அறிந்து உதவக்கூடியது; இவனே ஆடவர் திலகன், ஈடிசைத் தலைவன்-என்று கூறப்பட்டிருப்பவற்றிலிருந்து இவன் காட்டின் நீர்வளமும் நிலவளமும் இவனுடைய ஆட்சிச் சிறப்பும் வீரமும் புகழும் நன்கு விளங்கும்.

இவன் கண்கவர் வனப்பும் பொலிவும் மிக்கவன் என்பது ஏழாம் தொகுதிப் பாடலால் விளங்கும். ஏதோ