இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாக்கைக் கூத்து
73
சிவனுடைய மனக்குறிப்பை உணர்த்தின. அவனுடைய சிவந்த சடை, கூத்தின் அசைவால் நாற்றிசைகளிலும் அசைந்தாடியது. ஆனால் இடப்பாகமிருந்த உமையின் பாடகம் என்ற காலணி அசையவில்லை; சூடகம் துளங்கவில்லை; மேகலை ஒலிக்கவில்லை; மென்மார்பு அசையவில்லை. அவளது குழை என்னும் காதணி ஆடவில்லை; நீண்ட கூந்தலும் அவிழவில்லை. இங்ஙனம் உமையவளை இடப்பாகத்தில் ஏந்தி, திரிபுரம் எரித்த பின்னர் முக்கண்ணன் ஆடிய கொட்டிச்சேதம் என்னும் கூத்தை மேற் சொல்லப்பட்ட சாக்கையன் ஆடிக் காட்டினான்.
- “திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்
- பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ்
- செங்க ணுயிரந் திருக்குறிப் பருளவுஞ்
- செஞ்சடை சென்று திசைமுக மலம்பவும்
- பாடகம் பதையாது சூடகந் துளங்காது
- மேகலை யொலியாது மென்முலை யசையாது
- வார்குழை யாடாது ::மணிக்குழ லவிழா
- துமையவ ளொருதிற கை, வோங்கிய
- இமையவ னடிய கொட்டிச் சேதம்”
(சிலம்பு, நடுகற் காதை, வரி-67-75)
பறையூர்ச் சாக்கையன்
இங்ஙனம் இக்கூத்தை ஆடியவன் பறையூரைச் சேர்ந்தவன் என்றும், அவ்வூர் நான்மறையோரைக் கொண்டதென்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது.
- பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க்
- கூத்தச் சாக்கையன் ‘ (௸ வரி. 76-77)
செங்குட்டுவன் வஞ்சிமாநகர் வந்தவுடன் சொல்லியனுப்ப, அன்றே சாக்கையன் வந்தாடி-