ஐரோப்பியர் காலம்
247
நயம்
திருக்குற்றால மலை வளத்தினை ஆசிரியர் அழகுறப் புனைந்துள்ளார்:
'வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்;
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்;
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்;
ககன சித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்;
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்;
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்;
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
கதைத் தலைவி வசந்தவல்லி இறைவனின் திருவுலாக் காட்சியைக் கண்டு காதல் கொண்டு மயங்குவதைக் கவினுறக் கண்ணிகளில் சித்திரிக்கின்றார் இக் கவிஞர்.
'தண்ணமுது டன்பிறந்தாய் வெண்ணிலாவே! அந்தத்
தண்ணளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே!
பெண்ணுடன் பிறந்ததுண்டோ வெண்ணிலாவே! - என்றன்
இக் குறவஞ்சியை இயற்றியதற்காக, அது போது மதுரையை ஆண்ட முத்து விஜய சொக்கலிங்க நாயக்கர் 'குறவஞ்சி மேடு' என்னும் பகுதியை இனாமாக அளித்தார் என்பதைத் தாமிர சாசனத்தால் அறிகிறோம்.
முக்கூடற் பள்ளு
பள்ளு- பெயர்க் காரணம்
பள்ளர்களின் வாழ்க்கையினைச் சித்திரிக்கும் இலக்கியமாதலின் 'பள்ளு' என்ற பெயர் ஏற்பட்டது. (A dramatic poem dealing with the life of the pallars.)