பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இருண்டகாலத்திலும் சில தமிழ் நூல்கள் 25 சான்றுகள் இல்லாமலில்லை. அந்நிலையை புணர்ந்த சமணர்கள் தாமும் அம்முறையைக் கைக்கொண்டு மறைமுகமாகத் தம் சமயக் கொள்கைகளைத் தமிழ்மக்களிடையே பரப்பக் கருதினர். அதற்கேற்ப, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பௌத்தசமயம் வீழ்ச்சி யடைந்தது. பாண்டி நாட்டையும் சோழ நாட்டையும் ஆட்சிபுரிந்த களப்பிரரும் பௌத்தசமயத்தைத் துறந்து, சமண சமயத்தை மேற்கொண்டு ஒழுகத் தொடங்கினர். ஆகவே, சமணர்கள் தம் கருத் தினை நிறைவேற்றிக் கோடற்கு அதுவே தக்க காலமாக அமைந்தது. எனவே, தமிழ்நாட்டில், அமண்பள்ளிகளில் தங்கி யிருந்த சமண முனிவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு பயின்று சிறந்த புலமை எய்தித் தமிழ் நூல்கள் இயற்றும் ஆற்றலும் பெற்றனர் ; பிறகு தமிழ் மொழியில் நூல்கள் இயற்றி, அவற்றின் மூலமாகத் தம் சமயக்கொள்கைகளைத் தமிழ்நாட்டில் யாண்டும் பரப்ப முயன்றனர். அதற்கு உறுதுணை யாக, கடைச்சங்கம் நிலவிய பாண்டிநாட்டு மதுரையம்பதியில் பூஜ்யபாதருடைய மாணாக்கர் வச்சிரநந்தி என்ற சமண முனிவர் ஒருவர் கி. பி. 470 ஆம் ஆண்டில் திராவிட சங்கம் ஒன்று நிறுவி னர். இச் செய்தி, திகம்பர தரிசனசாரம் என்னும் சைன நூலொன்றல் நன்குணரக் கிடக்கின்றது.. அத்திராவிட சங் கம், சமணரது தமிழ்ச்சங்கமேயாகும். அது தமிழ்நாட்டில் அவர்கள் அமைத்த பிற சைன சங்கங்களுக்கெல்லாம் தலைமைச் சங்கமாக இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அந்நாட் களில் தமிழ்ச் சான்றோர்கள் எழுதிய நீதி நூல்களைத் தமிழ்மக்கள் பெரிதும் விரும்பிப் படித்துவந்தமையறிந்த அச் சங்கத்தார் முதலில் தாமும் தமிழ்மொழியில் நீதி நூல்கள் இயற்றுவாரா யினர். பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி என்பவை, அப் போது தோன்றிய நூல்களேயாம். அவை நீதிநூல்களாகக் கருதப்பட்டுவரினும் அவற்றில் எல்லாச் சமயங்கட்கும் ஏற்ற பொது நீதிகளோடு இடையிடையே சைனசமயக் கொள்கை 1. History of the Tamils by Mr. P. T. Srinivasa Aiyangar M. A. p. 247.