பக்கம்:தமிழ் உரை நடை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II எது உரைநடை? உரைநடை என்பது என்ன? அதன் விளக்கம் யாது? உரை நடை என்பது தொடர்மொழி. உரை ஒரு சொல், கடை ஒரு சொல். உரையானது கடந்து செல்லும் நெறியே உரைநடையாகின்றது. பல்வேறு சந்தங்களுக்கும் தாள அமைதிக்கும் ஏற்பப் பாவி நடக்கும் பாவினும் வேறுபடுத்த வேண்டி இதை உரைநடை என்று வழங்கினர்கள் எனக் கொள்ளுதல் பொருத்தமானதாகும். உரை என்னும் சொல் தமிழில் நெடுங்காலமாகவே வழக்கத்தில் இருந்து வருகின்றது. உரை என்பது எழுத்துக்கள் வரிவடிவாய்! அமைந்து ஒலி வடிவாய் அவற்றின் தன்மையை விளக்க வருவது என்றுதான் பலரும் பொருள் கொள்கின்றனர். உரைக்கப்படுவதால் உரையாயிற்று என்பர். அதாவது, வாயில்ை ஒன்றைப் பற்றிப் பொருள் தோன்ற உரைப்பதே. உரை எனக் கொண்டனர் என்னலாம். எனினும், வெற். ருெலியை இச்சொல் குறித்த காலமும் ஒன்று உண்டு. போலும் உரை என்பது வெறும் முழக்கத்துக்கும் வழங்கிய ஒரு சொல் எனக் காண்கிருேம். மேகங்கள் மலேயுச்சியில் குழ்ந்து இடித்துப் பேரொலி எழுப்புவதை இன்றும் கேட். கின்ருேம். அந்தப் பேரொலியாகிய முழக்கத்தையும் பழங் காலத்தில் உரை என்றே வழங்கினர்கள். குன்றம் குமுறிய உரை என்பது பரிபாடல் அடி. எனவே, அக்காலத்தில் ஒலியும் முழக்கமும் உரையாகப் பேசப்பட்டன என அறிகிருேம். 1. பரிபாடல் 8 : 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/36&oldid=874613" இலிருந்து மீள்விக்கப்பட்டது