இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தீராப் பழியைத்
தீர்க்கும் முனைவர்!
சுறுத்த மேனி, வெளுத்த உள்ளம்
கனிந்த அறிவு சான்றவர்-குறு
குறுத்தவாறு புதிய சொற்கள்
கொள்கை நூல்கள் ஈன்றவர்!
பாவாண ரென்று தமிழர் போற்றப்
பன் மொழிகளைப் பயின்றவர்-தமிழ்
மூவா தென்றும் முழங்கி வளர
முதுமை வரையில் முயன்றவர்!
பேரா சிரியப் பதவி நீத்துப்
பெருமை கமழ உழைத்தவர்-நொடி
சோரா இளைஞர் பல்லாயிரவர்
சூழுங் குடும்பந் தழைத்தனர்!
தீராப் பழியைத் தீர்க்கும் முனைவர்
தேவநேயர் வாழ்கவே! தனைப்
பாராட் டார்க்கும் மானங் காக்கும்
பாவாணர் தான் வாழ்கவே!
பாவலர்-தரங்கை பன்னீர்ச்செல்வம்