பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீராப் பழியைத்
தீர்க்கும் முனைவர்!


சுறுத்த மேனி, வெளுத்த உள்ளம்
கனிந்த அறிவு சான்றவர்-குறு
குறுத்தவாறு புதிய சொற்கள்
கொள்கை நூல்கள் ஈன்றவர்!

பாவாண ரென்று தமிழர் போற்றப்
பன் மொழிகளைப் பயின்றவர்-தமிழ்
மூவா தென்றும் முழங்கி வளர
முதுமை வரையில் முயன்றவர்!

பேரா சிரியப் பதவி நீத்துப்
பெருமை கமழ உழைத்தவர்-நொடி
சோரா இளைஞர் பல்லாயிரவர்
சூழுங் குடும்பந் தழைத்தனர்!

தீராப் பழியைத் தீர்க்கும் முனைவர்
தேவநேயர் வாழ்கவே! தனைப்
பாராட் டார்க்கும் மானங் காக்கும்
பாவாணர் தான் வாழ்கவே!

பாவலர்-தரங்கை பன்னீர்ச்செல்வம்