விடுமே! "எனக்கு health (ஹெல்த்) சரியாய் இல்லாததினால்
இன்றைக்கு morning (மார்னிங்). College (காலேஜ்)-க்குப்
போய் first (ஃபஸ்ட்) period (ப்பீரீடு) attend (அட்டண்)
பண்ணிவிட்டு professor (புரொபசர்) இடம் half a day
(ஆஃப்எடே) leave (லீவ்) கேட்டுக்கொண்டு hostel
(ஹாஸ்டமல் )-க்குப் போய் என் friend (ஃபிரண்டு)-இன்
room (ரூம்)-இல் rest (ரெஸ்ட்) எடுக்கலாமென்றிருக்
கிறேன்"என்று பேசும் மாணவரைப் போன்று ஆங்கிலம்
கற்றரும்'" ஏன் இவ்வளவு லேட்டு? டயம் என்ன தெரியுமா
டூட்டியைச் சரியாய்ச் செய். இல்லாவிட்டால் சூப்பிரண்
டிடம் ரிப்போர்ட்டுப் பண்ணி விடுவேன்." என்று பேசும்
கங்காணியைப் போன்று ஆங்கிலங்கல்லாதாரும், ஆங்கிலச்
சொற்களை அளவிறந்து வழங்குவதை யார்தான் அறியாதார்?
கற்றோரும் மற்றோரும் மதிப்பு வாய்ந்தோரையெல்லாம்
ஐயா' என்று விளிக்காது 'Sir' (ஸார்) என்றே விளிப்பதால்
'தமிழ் அகரமுதலியில் அவ்வாங்கிலச் சொல்லையே குறிக்
கலாமோ? அங்ஙனம் குறிப்பின் பிற சொற்களையும் குறித்
தல் வேண்டுமே! அன்று அது ஓர் ஆங்கில அகரமுதலியாக
வன்றோ மாறிவிடும்! ஆதலால் தமிழ்ப் பற்றும் அறிவும்
அற்ற ஒரு சாரார் வேண்டும் என்று கூறும் வெற்றுச்
சொற்களைப் பொருட்படுத்தற்க.
இதுகாறும் கூறியவற்றல், பிறரிடங் கடன்கொள்ள
வேண்டாத இராக்பெல்லர், நப்பில்டு, பிர்லா முதலிய
பெருஞ்செல்வர் போல், தமிழும் பிறமொழிகளினின்று
சொல்லைக் கடன் கொள்ளாதென்றும்; அயற்சொற்களை
எல்லாம் இயன்றவரை மொழி பெயர்த்தல் வேண்டும்
25