எடு:-.
பெயர் உயர்வுப் பன்மை
பன்மை
செல்வம் - செல்வன் செல்வனார்
செல்வர்,
செல்வன்மார்
மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளினின்று பொதுவாக
'அர்' ஈறு பன்மையையும் 'ஆர்' சிறு உயர்வுப்பன்மை
-யையும் உணர்த்தும் என அறிந்து கொள்க.
குமரன் என்னும் தேன்சொல் 'கும்' என்னும் அடிப்,
பிறந்து, கூட்டத்திற்குத் தகுந்தவன் அல்லது திரண்டவன்
என்னும் பொருளில் இளைஞனையே குறிந்தது. இதன்
பெண்பால் வடிவான குமரி என்னும் சொல்லும் இதே
பொருளில் இளைஞையைக் குறித்தது.
கும்முதல் = கூடுதல், திரளுதல், கும் கும்மல் = குவியல்.
கும்- குமி - குவி-குவை, குவால், குவிவு, குவவு
குமி - குமியல்-குவியல் கும்மிருட்டு-திணிந்த காரிருள்.
குவவுத்தோள் - திரண்டதோள்.
கும்-கும்பு-கும்பல் -கூட்டம். கும்புதல் - கூதடுல்.
கும்பு - கூட்டம்.
கும் குமர் திரண்ட இளமை, இளமை, கன்னிமை.
அழியாத்தன்மை. குமர் -குமரன்,குமரி.
குறிஞ்சிநிலத் தெய்வமான முருகனும் பாலைநிலத் தெய்வ மான காளியும், என்றும் இளமையர் என்னுங்கருத்துப் பற்றியே முறையே, குமரன் குமரி எனப்பட்டனர். காளியின் பெயராலேயே, மூழ்கிப்போன பழம்பாண்டி நாட்டுத் தென்கோடி மலையும் வடகோடியாறும் குமரி யெனப் பெயர் பெற்றிருந்தன. குமரிமலையின் பெயரா
34