பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றலும் தேர்வுப்பட்டமும்.

 புலமையும் தொழிலும் குறித்துவரும் சொற்கள்முன்னடையாகவரின் வேறடை தேவையில்லை.

எ-டு:-

பண்டிதமணி கதிரேசன் செட்டியார் புலவர் சின்னாண்டார் பேராசிரியர் சொக்கப்பனார் மருத்துவர் கண்ணப்பர் நாவலர் வேங்கடசாமி நாட்டார். புதுப்புனைவர் கோ. துரைசாமி நாயக்கர் (G.D.நாயுடு) பண்டாரகர் (Dr.) சாலை இளந்திரையனார்

பேராசிரியர் என்பதைப் பேரா. என்று குறுக்கலாம். சில சொற்கள் முன்னடையாகவும் பின்னடையாகவும் ஆளப்பெறும்.

எ - டு :-

          புலவர் புகழேந்தியார், புகழேந்திப் புலவர்,
          பெரியார் ஈ. வே. இரா., ஈ. வே. இராப் பெரியார்

'அவர்கள்' என்னும் பின்னடைய எவர் பெயர்க்கும் பின் குறிக்கலாம். அது எழுதுவாரின் நிலைமையும் விருப்பத்தையும் பொறுத்தது.

அரசினர் வழங்கும் பட்டங்களான அடைச் சொற் களைப் பின்வருமாறு மொழி பெயர்க்கலாம்.

                                 38