பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii


தவிர,
நாடகக் கதைக்கோப்பை ஐந்தாகப் பிரித்து
'அறிமுகம், வளர்ச்சி, உச்சம், தீர்வு,
விளை'வெனப் பலரும் வகுத்திருப்பதுபோல்
'மேடைப் பேச்சிலும் இந்தச் சாயலில்’
வெற்றிகள் கொணர்வது ஐயாவின் வழக்கம்.
இவை,
இயற்கையாய் அமைந்தவையோ,
முயன்று பயின்றவையோ,
பயிற்சியின் முதிர்ச்சியால் பழக்கப்பட்டவையோ
எதுவாக இருப்பினும்
நாடக அம்சங்கள் பொதிந்தவை என்பதில்
நாடக இயலார் சந்தேகம் கொள்ளார்.
இதனால்தான்,
சென்னை வானொலியில் சேவைசெய்தபோது (1956-1959) :அலைவரிசையூடு நாடகங்கள் பலதையும்
செவியேற்றம் செய்ய முடிந்ததுபோலும்!
அதற்காகவே,
வானொலி நாடகம் பலவற்றினையும்
‘எழுத்துரு'வாகவும் வெளியிற் கொணர்ந்தார்.
'தெள்ளாற்று நந்தி” நாடகத்தொகுதி
இதனால் முகிழ்த்த மலரெனக் கூறலாம்.
இத்தொகுதியிலொன்று,
'கைலாசநாதர் கோயிலெனும் சித்திரம்.
இதில்,