பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30

பிரதேசங்களிலும் நடப்பதுபோல் எண்ணிறந்த நாவல்கள் எழுதி இந்தச் சுரங்கத்தை அடியோடு சுரண்டி எடுத்து விட்டார்கள். வட துருவத்தில் வாழும் எஸ்கிமோக்களின் வாழ்க்கையைக்கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர் களுக்கு இல்லாத ஒரு வசதி, ஒரு செல்வம் இப்போது நமக்கு இருக்கிறது. தமிழ் நாட்டில் எத்தனையோ வகையான பிரதேசங்களும், பிரதேச வாழ்க்கைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு பிரதேசத்தின் சூழ் நிலைகள், சீதோஷ்ண ஸ்திதி கள், விளை பொருள்கள், தொழில்கள், உணவுகள், பழக்க வழக்கங்கள், ஆசார அனுஷ்டானங்கள், பேச்சு வழக்குகள் முதலிய பல விஷயங்களும் தனித் தன்மையோடு இருந்து வருகின்றன. எனவே பிரதேச வாழ்க்கை' என்ற இந்தப் புதிய சுரங்கத்தைத் தோண்டினல், அங்கே அகப்படும் பொருள்களைக் கொண்டு, எத்தனையோ அரிய இலக்கியக் கோபுரங்கள் கட்டலாம்; அதாவது அரிய நாவல்களைப் படைக்கலாம். இது தமிழ் நாவலாசிரியர்கள் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்று இப்போது தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.