பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 4

ஏனே, அந்த முன்னுரை பிற்காலப் பதிப்புக்களில் நீக்கப் பட்டு விட்டது. இது மிக வருந்தத் தக்கதாகும். - மொத்தத்தில், ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம் மாள்', 1940 முதல் 1950 வரையுள்ள காலகட்டத்தில் வெளிவந்த தலையான இலக்கியப் படைப்புக்களில் ஒன்று; இந்தக் கால் நூற்ருண்டுக் காலத்தில், தமிழ் நாவல் இலக்கி யத்தில், தனித்து நின்று ஒளி வீசும் நவரத்தினம் !

இந்த அற்புதத் தமிழ் நாவல் இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டும். அதற்குத் தமிழ்ப் பெருமக்களும், பேரறிஞர்களும் ஆவன செய்ய வேண்டும். - - - - -