5. சிறுபாணாற்றுப்படை 31.
நெய்தல் நிலத்தில் இருக்கும் ஊர். கிடங்கில்" கோமானாகிய நல்வியக் கோடனைப் பாடிக்கொண்டு நீங்கள் போனால் அங்குள்ள பரதவர் தமக்குரிய உணவைத் தருவார்கள். காடு அடர்ந்த முல்லை நிலத்தில் உள்ள உப்பு வேலூர் என்ற ஊருக்குப் போனால் அங்கே: உள்ளவர்கள் சமைத்த புளிக்குழம்போடு கலந்த சோறும் ஊனும் கிடைக்கும்’ என்று மேலே சொல்கிறான். -
"மருத நிலத்தினிடையே உள்ளது ஆமூர். அங்கே அந்தணர்கள் வாழ்கிறார்கள். உழவர்கள் இருக்கிறார்கள் உழவர்கள் வீட்டில் ஆடவர்கள் இல்லாவிட்டாலும், அங்கே உள்ள மகளிர், குழந்தைகளை அனுப்பி உங்களை அழைத்து வரச் செய்து நல்ல அரிசிச் சோறும் தண்டுக் குழம்பும் கொடுப்பார்கள்." or *
பிறகு நல்லியக் கோடன் இருக்கும் ஊரைப் பற்றிச் சொல்கிறான். "அவனது யானைபோர்க்களத்தில் பகைவர் பிணங்களைத் துகைத்துக் கால் நகங்களெல்லாம் சிவந்: திருக்கின்றன. பேய் மகள் மாமிசத்தை உண்டு சிரித்தால் எப்படி அவள் பற்கள் இருக்கும்? அப்படி இருக்கின்றன. அந்த நகரங்கள்! . :
"அவனுடைய நகர வாயிலினில் எல்லோரும் போக முடியாது. தடாரிப் பறை கொட்டும் பொருநர் போக லாம்; புலவர் போகலாம்; வேதபாரகராகிய அந்தணர் போகலாம்; வேறு யாரும் உத்தரவன் றி உள்ளே புக: . முடியாது.” . . - r
நல்வியக் கோடன் அவைக்களத்தில் வீற்றிருக்கிறான். அவனைச் சுற்றி அறிஞரும் வீரரும் மகளிரும் பிறரும் இருக்கிறார்கள். அவர்கள் அவனைப் புகழ்கிறார்கள். அவனுடைய இயல்புகள் பல. எல்லா இயல்புகளையும் எல்லாரும் பாராட்ட முடியுமா? சங்கீதம் தெரியாதவன்