பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மதுரைக் காஞ்சி 53

இப்படி நலம் செய்யும் நெடுஞ்செழியனை. பலரும் உன்னைப் பாராட்ட மகளிர் ஏந்திய பொற்கலத்தில் உள்ள மதுவை நுகர்ந்து நாள்தோறும் மகிழ்ந்து நீடுழி வாழ்வாயாகா!' என்று வாழ்த்திப் பாட்டை முடிக்கிறார் மாங்குடி மருதனார். -

பாண்டி நாட்டில் ஐந்து வகை நிலத்திலுள்ளார் செயல்களையும், மதுரைமாதகரத்தின் மாட்சியையும், பாண்டியனுடைய வரலாற்றையும், அவனுடைய முன் னோர்களின் பெருமையையும் விளக்கும் இந்த நூலைப் :பாடியதனால் மாங்குடி மருதனாருக்கு மதுரைக் காஞ்சிப்

புலவர் என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று.

4-قی