பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 441

ளேனும் பல பொருளேனும் காணப்படுதல் வியப்பினே விளேவியாது ; மற்றுச்சிறியதொரு பாட்டிலே பலதிறப்பட்ட ஆழ்ந்த பொருளெல்லாம் காணப்படுதலே வியக்கற்பாலதாகும். உரையில் ஒருவரையறை யின்மையிஞலே பொருட்கு வேண்டுவனவும் வேண்டாதனவுமான பல சொற்கள் நிரம்பி நின்று வியப்பினத் தாராவாய்த் தாமெடுத்த பொருளே மாத்திரம் புலங்கொள விளக்கி யொழிகின்றன. மற்றுச் செய்யுளிலோ, பொருட்சாரமான சொற்கள் மாத்திரம் ஆய்ந்தமைக்கப் படுகின்றனவாகலின், அச் சொற்கள் கொண்ட பொருட்கருவை அறியப் புகுவாைெருவன், தன் அறிவால் அதனேக் கூர்ந்தறியவேண்டுதலின் தன்னறிவு மிக நுணுகப்பெறுதலோடு அச் சிறிய சொல்லிற் பெரிய பொருளடங்கி நிற்றலே அறிந்த மாத்திரையினலே தன்னையறியாதொரு வியப்புமுடனெய்தி, அதன்கண் ஒர் இன்பந் தோன்ற அதன் வாய்பட்டுச் சிறக்கின்றன். ஆகவே, பாட்டு ஒன்றுமே உயிர்கட்கு அறிவை விளக்கி அதற்கும் மேற்பட்ட உணர்வை எழச் செய்து இன்பம் பயப்பதொன்ருய் நில பெறுகின்றது. உரைப் பயிற்சியில் அறிவு மாத்திரம் விளக்கம் எய்துமே யல்லது உணர்வின் வழித்தான இன்பந் தோன்றுதல் இல்லையென்க. அல்லது உம், உரையெல்லாம் இயற்கையிலேயே இசை தழுவாது நடப்பனவாமாகலின் அவை உணர்வை எழுப்புமாறு எவ்வாற்ருனுமில்லை யென்க. பாட்டுக்களோ, இயற்கையாகவே இடங்கட்கு ஏற்றபெற்றி யெல்லாம் பலதிறப்பட்ட இசை தழுவி நடக்குமாகலின் அவை உயிருணர்வை எழுப்புதற்கட்கு பின்னும் சிறப்புடையவாம். என்ன? இசையைக் கேட்டு உருகாத பொருள் உலகத் தில்லயன்றே? உலகியல் சிறிது மறியாத மகவை அன்னே தொட்டிலிற்கிடத்தித் தாலாட்ட அஃதவ்விசையா லின்புற்று உறங்கல் கண்டாமன்றே ? கொடிய விலங்கினங்களும் நச்சுயிர்களும் புல்லாங் குழலோசை கேட்டவளவானே தந்தொழில் மறந்து இன்புற்றுத் தன்வயமழிதல் தெளியப்பட்டதொன்றன்ருே ? இதன் மாட்சி இனிது அறிவுறுத்துவதற்கென்றே