இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
90 தமிழ் மணம் ஐவர் இருந்தனர். பொன் வாரியம். ஏரி வாரியம், பஞ்ச வார வாரியம் முதலிய வாரியங்கள் இருந்தன. கோயிற் சபைகளையும் ஊர்ச் சபைகளையும் மேற் பார்வை பார்க்க, நடுவிடத்து அதிகாரிகள் நாட்டைச் சுற்றி வந்து, அவ்வவற்றின் கணக்குகளை ஆராய்வார்கள். ஒரு காலத்தில் இவை பிறழ்ந்து நடந்ததால், நாடு முழுதும் கண் காணிதது வரக் கண்டாராதித்தர் என்ற சோழப் பெருமானார் சென்றார் என அறிகின்றோம்.