பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

f$3

திருமூலர் தமிழில் ஆகமம் செப்பவே அவனியில் வந்தனர்

24. பின்னகின் றென்னே பிறவி பெறுவது முன்னை கன்ருக முயல்தவம் செய்கிலர் என்னைகன் ருக இறைவன் படைத்தனன் தன்னகன் ருகத் தமிழ்ச்செய்யும் ஆறே. (இ - ள்) இறைவன் திருவருளே முன்னின்றுபெருது பின்னிடுவதால்தான் பிறவி எடுக்க நேரிடுகிறது. என்னே அறியாமை இவ்வாருன மக்கள் முன்பிறவியிலே நல்ல தவத்தை முயன்று செய்திலர். நானே தவம் செய்தவன். அதளுல்தான் இறைவன் என்ன நன்ருகத் தமிழ்மொழியில் ஆகமங்களை அறிவிக்க நன்முறையில் படைத்தனன்.

(அ.சொ) தமிழ் -தமிழ் ஆகமங்கள். (விளக்கம்) தவம் செய்தல் வேண்டும். அப்போதுதான் பிறவி அறும். இறைவனுக்குத் தமிழில் ஆகமம் வரவேண்டும் என்ற கருத்து இருத்தலின், திருமுலரைப் படைத்தருளினன். இதல்ை வேதாகமங்கள் தமிழிலும் உண்டு, அவற்றைத் தமிழிலும் இயற்ற இயலும் என்பனபோன்ற கருத்துக்களை விளங்கவைத்தமை காண்க.

திருமூலர் திருவாவடுதுறையில் அரசின் கீழ் இருத்தல் 25. ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு

ஊனமில் ஒன்பதுகோடி உகந்தனுள் ஞானப்பால் ஆட்டி நாதன அர்ச்சித்து யானும் இருந்தேன்கற் போதியின் கீழே. (இ - ள்) அறிவுக்குத்தலைவியான உமாதேவியின் கணவனை சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருவாவடு துறைபுக்குக் குற்றம் அற்ற ஒன்பது கோடி யுகங்களுள் பல