0 கவியரசர் முடியரசன் 0
விளங்குற்ற அறிவுவளம், உரிமை வேட்கை,
வீரமிக்க துணிவுள்ளம், இன்னோ ரன்ன
களங்க மறு நறுமலர்கள் மலரச் செய்யும்
கவிஞனவன் பெய்ததமிழ் மழைநீ ரெல்லாம்.
எங்கள்சுதந்திரதாகம் தணிவ தெந்தாள்?
என்றேங்கும் பொழுதத்துத் தாகம் தீர்க்கச்
சிங்கமகன் கோடைமழை யாக வந்தான்;
செந்தமிழர் திருநாட்டைப் பாடும் போது
பொங்கிவருங் காலமழை யாகி நின்றான்;
புதுமுறையில் பாஞ்சாலி சபதம் பாடிப்
பங்கமறப் பொதுநெறியில் தெய்வப் பாடற்
பண்பாடி அடைமழையாய்ப் பொழிந்து நின்றான்.
பாரதிபெய் தமிழ்மழையால் சாவா தின்னும்
பாட்டுலகம் வழங்கிவரும் கார ணத்தால்
வாரமிகும் அம்மழையை அமிழ்தம் என்றே
வாய்மணக்கச் சொல்லிடலாம்; பாடல் என்னும்
ஈரமழை பெய்யாது பொய்த்தி ருந்தால்
இனியகவிக் கடலுந்தன் னிர்மை குன்றும்;
நேரமெலாந் தன்னுரிமைப் பசியே வந்து
நின்றிருந்து நமைவருத்தி உடற்றும் அன்றோ?
1O1
10
வாரம் - அன்பு