1 OO 9 தமிழ் முழக்கம் 9
கள்ளெடுத்துத் தீயெடுத்துச் சேர்த்து நல்ல
காற்றெடுத்து வான்வெளியும் கலந்து வைத்துத் தெள்ளுதமிழ்ப் பெரும்புலவன் கவிதை யாக்கித்
தீந்திமிதீம் எனமுழங்கிப் பெய்தான் நீரின் அள்ளுசுவைப் பெருமைஎலாம் சுருங்கக் கூறின்
அகங்கவருமெண்சுவையும் பொருந்தி நிற்கும்; துள்ளிவரும் உணர்ச்சியினால் வேகங் காட்டுந்
தொடர்மழையில் நனைந்தவர்க்கு வீரந் தோன்றும். 6
பொதுவுடைமைச் செம்புலத்துப் பெய்யும் போது புத்துலகச் செம்மைநிறம் பொருந்தி நிற்கும்; மதியுடைமைக் கார்நிலத்திற் கொட்டுங் காலை
மலர்ந்திருக்குங் கருவண்ணம்; கருமை செம்மை பொதுளியநற் பூமிதனில் பொழியும் போது
பூத்திருக்கும் இருவண்ணம்; மதத்திற் பெய்தால் அதனுடைய வண்ணமுமாய்க் காட்சி நல்கும்;
அமரகவி பெய்ததமிழ் மழைநீரெல்லாம். 7
பழங்குப்பை கூளமெலாம் அடித்துச் செல்லும்;
பகுத்தறிவுப் புலத்தையது குளிரச் செய்யும்: வளங்கெட்ட வறுமையுடன் செல்வ மென்று
வருமேடு பள்ளமெலாம் சமப்படுத்தும்;