பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 - 71

ஈங்கே எடுத்துரைத்தால் ஏதேது நேரமையா? கூறும் மிளகியிலே கூடும் பெயர்களெல்லாம் யாரும் அறிவாரே! அத்தனையும் போதாவென் 2O றாங்கிலப்பேர் சொல்லி அழைப்பதையுங் கேட்டிருப்பீர்; ஈங்கெனக்கு நேர்சொல்ல யாரே இருக்கின்றார்? பார்மிகுத்த மாந்தர் பசிநீக்கும் எண்ணத்தால் சீர்திருத்தம் என்னைப்போற் செய்தவரார் இங்கே? கடல்கடந்து நானோர் கலப்புமணஞ் செய்தே இடர்களைய வந்துள்ளேன்; எல்லாரும் போற்றிஎனை ஆடுதுறை என்றே அழைப்பதையுங் கேட்டிருப்பீர்; நீடுபுகழ் கொண்டஇந்த நெல்லுக்கு நேருண்டோ? நாடோறும் வானொலியார் நத்திப் புகழ்ந்தென்னைப் பாடாத நாளுண்டா? பத்தியுடன் என்பெயரைச் 30 சொல்லாத நாளுண்டா? வேளாண்மைத் தோத்திரங்கள் இல்லாத நாளுண்டா? என்னருமைத் தொண்டரவர்; செல்வ வளமிக்க சீமான் எனைப்போலப் பல்வகைய ஊர்தி படைத்தவரார் இவ்வுலகில்? பேருந்து வண்டிகளில் பெட்புடன்நான் செல்வதுண்டு; நீருண்ட மேகமென நீள் புகையைக் கக்கும் தொடர்வண்டி ஏறித் தொடர்வதுண்டு; நீரில் படர்வதெனில் நல்ல படகுண்டு கப்பலுண்டு; காட்டுவழிச் செல்வதெனில் மாட்டுவண்டி ஏறிடுவேன்; மேட்டுக் குடியார்போல் வேற்றுமைகள் பாராட்டேன்; 40 ஏந்திவர ஊர்திகள்நான் எத்தனையோ பெற்றிருந்தும் மாந்தர் தலைகூட வாகனமாக் கொள்வதுண்டு; நொந்திருக்கும் நோயொன்று வந்துவிடின் வான்பறந்து வந்தெனக்குச் செய்யும் மருத்துவங்கள் எத்தனையோ! நாடாள வந்ததொரு நல்வேந்தன் நானென்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/70&oldid=571676" இலிருந்து மீள்விக்கப்பட்டது