பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

173

திரு. ந. ஆறுமுக முதலியார், திரு. அ. நடேச முதலியார், திரு. பாலசுப்பிரமணிய தேசிகர், திரு. மதண்டபாணி முதலியார், திரு. முருகேச முதலியார், திரு. பழநியாண்டி முதலியார் முதலாயினோர்.

தனித்துச் சுவாமிகளிடம் நேரில் சிலகாலம் பாடம் கேட்டுப் பின் பட்டம் பெற்றோர்: திரு. முத்து இராசாக் கண்ணனார், M.A., B.O.L., திரு. மு. நடராஜ தேசிகர், திருவிடை மருதுர், திருமதி-இலக்குமித் தாயாரம்மை, சென்னை, க. பா. வேல்முருகன் முதலியோர். அவருள் முத்து இராசாக் கண்ணனார் என்பவர் சுவாமிகள் தம் மடாலயத்தில் 1941-ல் கந்தசஷ்டி விழா நாட்களில் ஆற்றிய சொற்பொழிவுகளைக் குறிப்பெடுத்து விரித்தெழுதிக் கந்தர் சட்டிச் சொற்பொழிவுகள் என்ற பெயருடன் வெளியிட்டார். திருவண்ணாமலையில், சுவாமிகள் அதைப் பார்த்து அணிந்துரையும் வழங்கினார்கள்.

1933-ல் நிறுவப்பெற்ற ஸ்ரீமத் ஞானியார் கலாசாலையில் புகுமுகத் தேர்விற்குப் பயின்றும் பின்னர் கல்லூரிகளிற் பயின்று புலவர் பட்டம் பெற்றும் சிறந்தோர் :

திரு. ஆ. சிவலிங்கனார், திரு. சுந்தரசண்முகனார், திரு. க. செந்தில் நாயக முதலியார், திரு. தண்டபாணி முதலியார், திரு. பா. ஏகாம்பரம், க. சம்பந்தம், மதுராந்தகம், திரு. ந. ஆறுமுக முதலியார், செங்கற்பட்டு, ந. திருநாவுக்கரசு, சென்னை, திரு. சக்ரபாணி (ஆயிரரூபா பரிசு பெற்றவர்), சிந்தாதிரிப்பேட்டை- சென்னை, திரு. வை. இரத்தினசபாபதி, எம்.ஏ.பி.ஓ.எல்., திரு. ப, திருநாவுக்கரசு, குடந்தை, திரு. நா. கருணாநந்தம், திரு. ந. தண்டபாணி, திரு. முத்தைய முதலியார், நெல்லிக்குப்பம், திரு. பா. செந்தில் நாயக நாயனார், திரு. தட்சிணாமூர்த்தி முதலாயினோர்.

பலர், உயர்நிலைப் பள்ளியிலும், சிலர் கல்லூரிகளிலும் பணியாற்றும் புலமை நிரம்பியவர்களாவர். அவ்வவரும் பற்பலரைத் தமிழ் பயிற்றுவிக்கும் பணிகளிலீடுபட்டுத் தமிழன்னைக்கு அரும் பணியாற்றியும் அருஞ் சமயத் தொண்டுகளி லீடுபட்டும் வருகின்றனர்.