பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வல்லிக்கண்ணன்

3. மனம் நினைத்தற்கு கருவியாயுள்ளது. சில சுவடிகள் ஸ்மிருதிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஸ்மிருதி என்ற சொல்லிற்கு நினைப்பு என்பது பொருள். நினைப் புணர்ச்சி இல்லாதவனை பைத்தியக்காரன் என்று சொல்லுகின்றோம். பைத்தியக்காரனை விஸ்மிருதி என்பது வழக்கம். (வேதங்களை மனப்பாடம் செய்த நினைப்பிலிருந்து சொல்லப்படுவதால் வேதங்களுக்கு ஸ்மிருதி என்று பெயர். ஸ்மிருதி என்றால் சொல்லப்படுவது என்றும் பொருள்)

4. மோனம் என்பது ஞானவரம்பு என்று அறிக. வாய்மூடி இருந்தால் மோனம் அன்று; மனம் அலையாமல் அடங்கி நிற்பதே மோனம்; சிந்தனை அற்று இருப்பதே மோனம். ஞானியாரடிகள் தமது சொற்பொழிவின் போது சொற்களின் பொருள் பற்றிய விளக்கங்களை இவ்வாறு கூறிச் செல்லுவது வழக்கமாக இருந்திருக்கிறது.

மேலும் ஒரு விளக்கத்தைப் பார்ப்போம்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்"

எனும் குறட்பாவை, நாம் அனைவரும் அறிவோம். பொறிவாயில் ஐந்தவித்தான் என்பதற்குப் பரிமேலழகர், “மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் பொறிகளை வழியாகவுடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது எனப் பொருள் கூறுவார்.இதற்கு ஞானியாரடிகள் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்.

“மெய்யன்பர்களே !

மக்களை மாக்களினின்றும் பிரித்து வைப்பது சிறந்த அறிவு ஒன்றே. அவ்வறிவைச்செலுத்தும் வழிகள் இரண்டு. 1) உள்ளே 2) வெளியே இவ்விரண்டே அவ்விரு வழிகளாகும். அறிவை உட்செலுத்தும் வழக்கம் மக்களுள் பெரும் பாலார்க்கில்லை எனலாம். பின்னதே, யாவராலும் கைக்கொள்ளப்படும் ஒன்று. வெளிமுகமாக அறிவைச் செலுத்துங்கால் ஐந்து வழிகள் மூலம் அதனைச் செலுத்துகின்றோம். அவ்வழிகள், கண், மூக்கு, வாய், காது, மெய் என்பன. கடவுள் இவ்வாறு இவ்வைந்தின் வழித்தன் அறிவைச் செலுத்துபவன் அல்லன். ஆகவே, அவன் பொறி வாயிலைந்தவித்தான் என்று புகழப்பட்டான்.

ஐந்தனுள் கண்ணே முதன்மை இடத்தைப் பெறுகின்றது. அது அமைந்திருக்கும் இடமே அம்முதன்மையைத் தருதற்குக்