பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வல்லிக்கண்ணன்

"அறிவு துணை செய்யும் காலம் இது. தமிழர் தமிழிலேயே கொள்ள வேண்டும் என்ற பற்றுடன் விளங்குகின்றனர். பற்றுடை யோர் போன்று நடிக்கும் சிலர் போலி நடிப்பை நான் அறவே வெறுக்கின்றேன்.

தமிழ்ப் புத்தகங்களை நன்றாகப் படிக்க வேண்டும். அவற்றில் பழக வேண்டும். அவ்வறிவைப் பெறுதல் வேண்டும். இல்லையேல், தமிழரென்று வெளிக்கு கூறிக்கொள்வோர்க்கு வெட்கமில்லை என்றே நான் கூறுவேன்.