உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

கடிதம்: 3 தம்பி, மத்தாப்பூ நேருஜியின் புகழ்! -டிட்டோவிற்கு வரவேற்பு!- ஐந்தாண்டுத் திட்ட ஊழல். உலகமெல்லாம் எங்கள் நேருஜியைப் புகழ்கிறது- உதவாக்கரைகளே! நீங்கள் அவருடைய ஆட்சியை, அவர் நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சியைக் கண்டிக்கிறீர்களே, இது முட்டாள்தனமல்லவா, போக்கிரித்தனமல்லவா, என் றெல்லாம் மேடை அதிர அதிரக் காங்கிரசார் பேசுகிறார்கள் என்று எடுத்துக் காட்டியிருக்கிறாய். உலகம் புகழ்கிறதே, என்பதற்கு ஆதாரமாக, நேரு பண்டிதர் சர்வ தேச விவகா ரங்களிலே கலந்து கொள்வதையும், அவர் பல்வேறு நாடு களிலே பவனி வருவது, ராஜோபசாரம் பெறுவது ஆகியவற் றையும் சுட்டிக் காட்டுகிறார்கள். அமெரிக்கா சென்றார், சீனா சென்றார், இந்தோசீனா சென்றார், இந்தோனேஷியா சென்றார், சீமைக்குப் பலதடவை சென்றார், இதோ இப்போது ரஷ்யாவுக்குப் போகப் போகிறார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்கள். உலகம் இருவேறு முகாம்களாகி இருப்பது உனக்குத் தெரியும். ஒரு முகாமில் கம்யூனிஸ்ட் ஆட்சிமுறை நாடுகளும், மற் றொரு முகாமில் அதற்கு எதிரிடையான ஆட்சி முறை நாடு களும் உள்ளன. இரு முகாம்களும், தத்தமது கட்சிக்கு ஆள் பிடிக்கும் காரியத்தில் ஈடுபட்டுவிட்டிருக்கின்றன. தம் கட்சியில் சேராவிட்டாலும் பரவாயில்லை, எதிர்க் கட்சியில் சேராதிருந் தால் போதும், நடு நிலைமை வகித்தால் போதும் என்று பாடுபடுகின்றன. இதற்காக, புகழுரை, பாராட்டுரை, உபசாரம், விருந்து இவைகளை அள்ளி அள்ளி வீசுகின்றன. பணம் தேவையா, தாராளமாகத் தருகின்றன ! நிபுணர் கள் வேண்டுமா, கப்பல் கப்பலாக அனுப்பி வைக்கிறார்கள்! இந்தப் புகழுரை, போதை தருமளவு தரப்படுகிறது? நேரு பண்டிதர் இதிலே மயங்கிவிட்டாரோ இல்லையோ தெரியவில்லை. காங்கிரஸ் ஏடுகளிலே வெளியிடப்படும்