உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28 செய்கிறது என்று பராக்குக் கூறுவதுதான்! எனினும்,அதனா லேயே சகித்துக் கொள்ள முடியாமல்,ஆட்சி கேலிக்கூத்தாக இருக்கிறது; பொதுமக்கள் பணம் விரயமாகிறது; திறமைக் குறைவாக நடந்து கொண்டிருக்கிறது என்று கண்டித்து எழுதிவிட்டது. முட்டாள் தனத்துக்கு முதல் பரிசு பெறுகிற தாம் சர்க்கார்!! நாம் கூற அஞ்சுகிறோம். ஆனால் இதோ, "கல்கி"யின் கண்டனத்தைப் பாருங்கள்:- “ஏழு வருஷ காலமாக பாங்கிச் சிப்பந்திகள் கிளர்ச்சி செய்யும் போதெல்லாம் இந்திய சர்க்கார் பாங்கி முதலாளி யின் கட்சியில் இருக்கிறார்கள் என்று புகார் சொல்லி வந்தார் கள். இதை அவ்வளவாக பொதுமக்கள் நம்பவில்லை. ஆனால் ஸ்ரீ வி.வி. கிரியின் ராஜினாமா மேற்படி புகாரை இதுவரை நம்பாதவர்களையும் ஓரளவு நம்பும்படி செய்து விட்டது." 0 0 0 இந்த பாங்கிச் சிப்பந்திகள் தகராறு விஷயமாகக் கையா ளப் பட்டிருக்கும் மௌடிகத்தனம் எல்லாவற்றையும் தூக்கி அடிப்பதாக இருக்கிறது. அரசாங்க நிர்வாகச் சரித்திரத்தில் திறமை இன்மைக்கும் மௌடிகத்துக்கும் முதற் பரிசு கொடுப் பதாக இருந்தால் இதற்குத்தான் கொடுக்க வேண்டும். டிரிபு னலுக்குமேல் டிரிபுனல் நியமிப்பது,விசாரணைக்கு மேல் விசா ரணை நடத்துவது, இதற்காக கோடிக்கணக்கில் பொது மக்க ளின் பணம் விரயமாவது, கடைசியாக வெளியாகும் தீர்ப்பை அவசரஉத்தரவு போட்டு நிறுத்தி வைப்பது என்றால், இவை யெல்லாம் உண்மையில் அரசாங்க நிர்வாகத்தைச் சேர்ந் த்தா, நாடக மேடையில் நடிக்கப்படும் கேலிக்கூத்தா என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. 0 0 0 இப்போது என்ன சொல்கிறார்கள், நம்மீது எரிந்து விழும் காங்கிரஸ்காரர்கள். கோபுரமேறி கொடி காட்டுவது பற்றிக் குதூகலிப்பது இருக்கட்டும், நண்பர்களே! இதோ கூரையேறிக் கோழி பிடிக் காததற்கு என்ன சமாதனம் சொல்கிறீர்கள்? உலகம் புகழ்கிறது என்கிறீர்கள் -மெத்தச்சந்தோஷம் - ஆட்சியிலே இந்த அவலட்சணம் இருக்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள்? ஊர்க் கோடியில் கோதானம் கொடுக்கிறார். என்று புகழ்கிறீர்கள்!இங்கே மாதா மடிப்பிச்சை எடுக்கிறாளே இதற்கென்ன சொல்கிறீர்கள்! என்றெல்லாம் கேட்டால், காங் கிரஸ் நண்பர்களுக்கு வெட்கமும் துக்கமும் சேர்ந்துதாக்கும்.