உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

+33 இப்படிப் பணத்தை வாரியிறைத்து நடத்தப்படும் மகாநாடுகள், பவனிகள்,கண் காட்சிகள்,இவையாவும் அடிப் படைக் குறைபாடுகளை மக்கள் சில காலம் உணராமல் இருக் கச் செய்ய உதவுமே தவிர, கடைசிவரை காப்பாற்றிவிடாது. திறமைமிக்க ஓவியனொருவன், பழக் கொத்து தொங்கு வதுபோலத் திரையிலே தீட்டித் தொங்கவிட்டிருந்தானாம். பறவைகள் சில பழத்தைக்கொத்தித் தின்பதற்காக வட்டமிட் டனவாம்! ஓவியனுடைய கைத்திறனை அனைவரும் பாராட் டத்தானே செய்வர். ஆனால், பறவைகளும் பாராட்டுரை வழங்கினோரும், ஓவியத்திலே கண்ட பழமே போதும் என்றா இருந்து விட முடியும். பாராட்டுவர், பிறகோ பழச்சுவை தேடி வேறிடம் செல்வர். பறவைகளே கூடப் பறந்துபோகும் பழத்தோட்டம் நோக்கி. அதுபோலத்தான் ஆவடிகள்! ஆவடிபோல வேறு எந்த கட்சியினாலும் நடத்திக் காட்டவே முடியாது என்பதல்ல. ஆவடிபோல விமரிசையாக மாநாடுகள் நடத்தவே கூடாது என்பதல்ல தம்பி! ஆவடி நடத்திக் காட்டிவிட்டு, இத்துடன் திருப்தி பெருக! இன்னலை மறந்திடுக! இன்பம் பெற்றதாக எண்ணிக் கொள்க!என்று கூறுவது கூடாது என்பதைத்தான் கூறுகிறேன். 'ஆவடி சுண்டேன், ஆனந்தம் கொண்டேன், இனி நான் காவடி தூக்கி ஆடிடுவேன், களிப்புச் சிந்து பாடிடுவேன், காங்கிரஸ் கட்சியினருடன் கூடிடுவேன்' என்று பேசிடும் போக்கினர் பற்றிக் கவலை கொள்ளாதே. நமக் கென்று ஒரு மகத்தான குறிக்கோள் இருக்கிறது - அதிலே வெற்றி பெறுவதற்காகப் பணியாற்றும் நாம், ஆவடி கண்டு அயர மாட்டோம், பாண்டூங் பசப்புக்கும் பலியாகி விட மாட்டோம். ஆவடியிலும் பாண்டூங்கிலும், அலங்காரம் கண்டு அன்பர் சிலர் சொக்கிப் போகின்றனர். நாமோ இவ்வளவு ஆவடி களுக்குப் பிறகும்கூட, அங்கோர் சமயம் இங்கோர் சமயம் என்ற அளவிலாவது, சிலர்பலர், அரசியலில் இன்று காணப் படும் அவலட்சணத்தையும், வடநாட்டு ஆதிக்கத்தையும், கண்டிக்க முன்வருவது காண்கிறோம், மகிழ்ச்சியும் நம்பிக்கை யும் கொள்கிறோம். ஆவடி, அனைவரையுமல்ல, வழி தவறி யோர், வழுக்கி விழுந்தோர், வாழ்த்திப் பரிசு பெறுவோர் ஆகியோரைத்தான் சொக்கிடச் செய்கிறதே தவிர, கொள் கையில் உறுதி படைத்த எவரையும் காவடி தூக்கியாக் கிடாது-மாறாக, காவடி தூக்கிடும் போக்கினை அத்தகை யோர் கண்டித்த வண்ணம்தான் இருக்கிறார்கள். "ஐயன்மீர்! ஆவடி நடத்திக் காட்டினீர்,இருபது இலட் சம் செலவிட்டீராம்! உங்களிடம் வசதி இருக்கிறது, செலவிட் டீர்கள்! பாண்டுங் பற்றிப் பேசுகிறீர்கள். பரவசத்துடன்.