உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46 உள்ள சடலங்களாலல்ல, தொழிற்சாலைகளிலே நரம்பு முறி யப் பாடுபடும் பாட்டாளிகளால்தரன் நாடு செழிக்கும். புண் ணிய தீர்த்தத்தால் அல்ல, புதிய புதிய நீர்த் தேக்கங்களால் தான் பாலைவனம் சோலைவனம் ஆகும். ஆறுகால பூஜை, அபி ஷேகம், ஆராதனை இவைகளால் அல்ல, அணைக்கட்டு, மின் சார நிலையம், உர உற்பத்தி இவைகளால்தான் மக்களின் வாழ்வு மேம்பாடு அடையும் என்ற இன்னோரன்ன கருத்துக் களெல்லாம் ஊற்றெடுத்து ஓடிவரும்! ஆனால் அலசிக் காட் டும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தம்பி ! ஐந்தாண்டுத் திட்டத்திலே நடைபெற்ற ஓரவஞ் சனையைப்பற்றி, நாம் உள்ள உரத்துடன், ஊராள்வோரின் பகைப்பற்றிக் கவலைப்படாமல் காங்கிரசில் இருப்போரும் நுழை வோரும் கண்டிப்பது பற்றிச் சட்டை செய்யாமல் எடுத்துக் காட்டியதால்தான், இப்போது காங்கிரஸ் வட்டாரமேகூட அதுபற்றிப் பதைத்தும் பதறியும் துக்கம் தொண்டையை அடைக்க, வெட்கம் பிய்த்துப் பிடுங்கும் நிலையில் பேசிடக் கேட்கிறோம். சுதேசமித்திரன் கேலிச்சித்திரம் போட்டிடக் காண்கிறோம். தலைமை நிலையத்திலிருந்து உங்கள் ஊருக்கு வந்திருக்குமே படம்!! தம்பி! இடையே இதையும் சொல்லி வைக்கிறேன். எவ்வளவோ செலவாகிறது, எதெதற்கோ செலவாகிறது, எதையாவது குறைத்து பணம் சேர்த்து அந்தக் கேலிச் சித் திரத்தைப் பெரிய அளவில் பத்தாயிரம் மக்கள் கொண்ட கூட்டத்திலும், கோடியில் உள்ளவருக்குப் பளிச்சென்று தெரி யும் வகையில் துணியில் ஓவியமாக்கி வைத்துக்கொண்டு, நமது கழகக்கூட்டங்கள் நடைபெறும்போது மேடை அருகில் அதைத்தொங்கவிடு - ஒரு மணிநேரச் சொற்பொழிவை அந் தப் படம் தந்துவிடும். காங்கிரஸ் வட்டாரமே இப்போது துணிந்து கிளம்பு கிறது தம்பி, வடநாட்டின் போக்கைக கண்டிக்க. ஆமாம், வீணுக்கா உழைத்தோம், தூவிய விதை என்ன. பதறா? காங் கிரஸ் நண்பர்களின் மனம்தான் என்ன வறண்ட பாலையா? பலன் தெரிகிறது மெள்ள மெள்ள! பல இதழ்கள், சில சோகமாகவும், சில கோபமாகவும், மத்திய சர்க்காருக்கு அநீதியை எடுத்துக் காட்டுகின்றன. வடநாட்டுச் சர்க்கார் என்று விளக்கமாக நாம் சொல்கி றோம். இந்த ஏடுகள், மத்திய சர்க்கார் என்று விநயமாகச் சொல்கின்றன. ஆரம்பக் கட்டமல்லவா, கூச்சம், அச்சம், இருக்கிறது. .