பக்கம்:தம்பியின் திறமை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இவற்றையெல்லாம் பார்க்கப் பார்க்க பணக்காரனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அப்பொழுதுதான் அவனுக்கு மாலி யாங்கைப் பட்டினிபோட முடியாது என்கிற விஷயம் புலப் பட்டது. மாலியாங் தனது மந்திரத்துரிகையின் உதவியால் தனக்கு வேண்டிய உணவுப்பொருள்கள், விளக்கு முதலிய எல்லாவற்றையும் உண்டாக்கிக்கொள்ள முடியும் என்பதை அவன் உணர்ந்தான். அவனுக்கு மேலும் கோபம் பொங்கிற்று. டேய், சின்னப்பயலே, உன்னை இப்பொழுது சித்திரவதை செய்கிறேன் பார்' என்று கத்திக் கொண்டே அவன் தன்னு: டைய ஆட்கள் மூன்று பேரை அழைத்துவரச் சென்ருன்.

மாலியாங் கலக்கமடையவில்லை. அவன் ஏணி ஒன்று வரைந்தான். அது உண்மையான ஏணியாக மாறிற்று. அதைச் சுவரிலே சாத்தி அதன் மேலே ஏறிக் கூரையின் வழியாக அவன் வெளியே தப்பித்துக்கொண்டு போய் விட்டான். பணக் காரன் ஆட்களோடு திரும்பி வந்து பார்க்கும்பொழுது அறைக் குள்ளே ஏணிமட்டும் இருந்தது. ஆத்திரத்தோடு அவன் ஏணி மேலே அவசரம் அவசரமாகத் தாவி ஏறினன். அந்த அவசரத் திலே ஏணி சறுக்கிக் கீழே விழுந்தது. அவன் தொப்பென்று தரையில் விழுந்து புரண்டான். அவன் தலையிலே நன்ருக அடி பட்டு எலுமிச்சம்பழம்போலப் புடைத்துக்கொண்டது. அவனுக் குக் கோபம் இன்னும் அதிகமாயிற்று. அவன் வெளியே ஒடிஞன்.

இதற்குள் மாலியாங் தனது மந்திரத்தூரிகையின் உதவி யால் ஒரு குதிரையை உண்டாக்கி அதன்மேல் ஏறிக்கொண்டு புறப்பட்டான். அதைக் கண்டதும் பணக்காரன் தன்னுடைய குதிரையின்மேல் பாய்ந்து ஏறிக்கொண்டு மாலியாங்கைப் பிடிக்க வேகமாகத் தொடர்ந்தான். மாலியாங்குக்குக் குதிரைச் சவாரி செய்து பழக்கம் இல்லாததால் அவனுல் குதிரையை வேகமாகச் செலுத்த முடியவில்லை. பின்னல் வரும் குதிரை நெருங்கிக்கொண்டேயிருந்தது. பணக்காரன் ஒரு ஈட்டியைத் தன் கையிலே ஓங்கிக்கொண்டிருந்தான். அதைக் கண்டதும் மாலியாங் மந்திரத்துசரிசையை எடுத்தான். காகிதத்திலே ஒரு வில்லும் ஒரு அம்பும் வரைந்தான். அவை உண்மையான