பக்கம்:தம்பியின் திறமை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




படுததுக் கிடந்தது. இறக்கைகளைப் பட பட வென்று அடித் துக்கொண்டு துடித்தது.

வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த இந்தாப் பாட்டி அதைப் பார்த்து விட்டாள். அந்தக் குருவி படுகின்ற வேதனை யைக் கண்டு அவளால் பொறுக்கமுடியவில்லை. அவள் கண்களிலே கண்ணிர் பெருகிற்று. அவள் குருவியை அன்போடு எடுத்தாள். காயத்திற்கு மருந்து தடவினுள். குருவிக் குத் தண்ணீரும் அரிசியும் கொடுத்தாள். குருவியின் துன்பம் ஒரளவிற்கு நீங்கிற்று. இருந்தாலும் அதல்ை பறக்க முடிய வில்லை. அசையாமல் படுத்துக் கிடந்தது.

இந்தாப்பாட்டி அதைத் தன் வீட்டிலேயே வைத்துக் காப்பாற்றி வந்தாள். நல்ல நல்ல இரையும் கொடுத்தாள்.

சில நாட்களிலே சிட்டுக்குருவியின் காயம் ஆறிற்று. உடம்பில் வலிமை ஏற்பட்டது. அதனுல் அது கிழவியின் வீட்டை விடடுப் பறந்து போய்விட்டது. ஆனல் அது கிழவி யை மறக்கவில்லே.

ஒரு நாள் அது எங்கிருந்தோ திடீரென்று பறந்து வந்தது. இந்தாப்பாட்டியின் முன்னுல் உட்கார்ந்தது. அதன் வாயில்