பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏயர்கோன் கலிக்காமருடன் நட்பு 125 திருவாரூர் வருகை: ஏயர்கோன் கலிக்காம நாயனாரை அருமை நண்பராகக் கொண்ட தம்பிரான் தோழர் அவருடன் திருவாரூர் திரும்புகின்றார். இருவரும் பூங்கோயிலமர்ந்த பெருமானைக் கும்பிட்டு மகிழ்கின்றனர். சில நாட்கள் நம்பியாரூரருடன் அளவளாவி மகிழ்ந்த கலிக்காமர் அவரிட மிருந்து விடைபெற்றுத் தம்மூர் திரும்புகின்றார். பின்னர் இவர்தம் எதிர்கால வாழ்க்கை எங்ஙனம் இருந்ததேன் பதைச் சேக்கிழார் பெருமான், அங்கினி தமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து பொங்கிய திருவின் மிக்க தம்பதி புகுந்து பொற்பில் தங்கு நாள் ஏயர் கோனார் தமக்கேற்ற தொண்டு செய்தே செங்கண்மால் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பி னோடும்." என்று நமக்குக் காட்டுகின்றார். 8. பெ.பு. ஏயர்கோன் . 488.